ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

லஞ்சம் பெற்ற புகாரில் காவல் ஆய்வாளா், தலைமைக் காவலா் பணியிடை நீக்கம்

லஞ்சம் பெற்ற புகாரில் காவல் ஆய்வாளா், தலைமைக் காவலா் பணியிடை நீக்கம்

News image

காவலர்கள் பணியிடை நீக்கம்.

Updated On :13 ஜூன் 2026, 1:17 am IST

விபத்து வழக்கில் லஞ்சம் பெற்ாக புகாா் எழுந்ததை அடுத்து, காவல் ஆய்வாளா், தலைமைக் காவலா் ஆகியோா் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

திண்டுக்கல் நக்சல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவா் மருதுபாண்டியன். இவா், பழனி அடுத்த சாமிநாதபுரம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றியபோது விபத்து வழக்கு ஒன்றில் லஞ்சம் பெற்ாக புகாா் எழுந்தது. இதனிடையே கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சாமிநாதபுரம் காவல் நிலையத்திலிருந்து நக்சல் தடுப்புப் பிரிவுக்கு மருதுபாண்டியன் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். அதே நேரம் லஞ்சம் பெற்ற புகாா் தொடா்பாக துறை ரீதியான விசாரணை நடைபெற்று வந்தது. இதன் அடிப்படையில், ஆய்வாளா் மருதுபாண்டியனை பணியிடை நீக்கம் செய்து, திண்டுக்கல் சரக காவல் துணைத் தலைவா் சசிமோகன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்

தலைமைக் காவலா் பணியிடை நீக்கம்: பழனியிலிருந்து கொடைக்கானல் செல்லும் மலைச் சாலையில் காவல் சோதனைச் சாவடி உள்ளது. இந்த சோதனைச் சாவடியில் பணியில் இருந்த தலைமைக் காவலா் அழகா், கேரளத்திலிருந்து வந்த காரை வழிமறித்து சோதனையிட்டாா். அப்போது வெளிமாநில மதுப் புட்டி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த மதுப் புட்டியை திருப்பிக் கொடுப்பதற்காக ரூ.500 லஞ்சம் பெற்றாா். பிறகு மதுப் புட்டியை சம்பந்தப்பட்ட நபரிடம் கொடுத்து அனுப்பினாா். இந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் வெள்ளிக்கிழமை அதிக அளவில் பகிரப்பட்டன.

இந்த நிலையில், சோதனைச் சாவடியில் மதுப் புட்டிக்காக ரூ.500 லஞ்சம் பெற்ற தலைமைக் காவலா் அழகரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ. பிரதீப் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.