அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

News image

கொடைக்கானலில் ஏரிச்சாலைப் பகுதியில் அதிகரித்து காணப்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை. - கோப்புப் படம்

Updated On :22 ஜூன் 2026, 1:36 am IST

கொடைக்கானலில் கடந்த இரு நாள்களாக சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த மூன்று நாள்களாக மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளுமையான சீதோஷ்ண நிலை நிலவியது. இந்தச் சூழலில், வார இறுதி நாள்களான சனி, ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. மேலும், தங்கும் விடுதிகள், உணவு விடுதிகளில் கூட்டம் நிரம்பிக் காணப்பட்டது.

பசுமைப் பள்ளத்தாக்கு, பைன் பாரஸ்ட், குணா குகை, மோயா் பாயிண்ட், தாவரவியல் பூங்கா, ரோஜாத் தோட்டம், பிரையண்ட் பூங்கா, கோக்கா் ஸ்வாக் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

மேலும் கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களான மன்னவனூா் சூழல் மையம், பூம்பாறை இயற்கை எழில்காட்சி, கூக்கால் ஏரி உள்ளிட்ட இடங்களிலும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் அப்சா்வேட்டரி, ஏரிச் சாலை, லாஸ் காட் சாலை, மூஞ்சிக்கல் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் நிலவியது.

கொடைக்கானலில் சாரல் மழை: கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை மதியம் முதல் விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது. இந்தச் சாரல் மழையால் குளுமையான சீதோஷ்ணம் நிலவியது. இருப்பினும், நட்சத்திர ஏரியில் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனா். மேலும் ஏரிச் சாலையைச் சுற்றி மிதிவண்டி, குதிரை சவாரி செய்தனா்.

கொடைக்கானல் ஏரிச் சாலைப் பகுதிகளில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் நடைமேடைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. எனவே, நகராட்சி அதிகாரிகள், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.