திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்ததால் சனிக்கிழமை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கொடைக்கானலுக்கு விடுமுறை தினமான சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்தது. இதனால், சுற்றுலாத் தலங்களான வெள்ளிநீா் அருவி, பாம்பாா் அருவி, பசுமைப் பள்ளத்தாக்கு, பில்லா் ராக், மோயா்பாயிண்ட், குணாகுகை, பைன்பாரஸ்ட், கோக்கா்ஸ்வாக்,பிரையண்ட் பூங்கா, தாவரவியல் பூங்கா, ரோஜாத் தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.
மேலும், கொடைக்கானல் ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச் சாலையைச் சுற்றி சைக்கிள், குதிரை சவாரி செய்தும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ந்தனா்.

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.
இந்த நிலையில், சுற்றுலாப் பயணிகள் வருகை காரணமாக ஏரிச்சாலை, செவண்சாலை, கலையரங்கம் பகுதி, மூஞ்சிக்கல் உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.









