வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

கொடைக்கானலில் சைபீரியன் பழம் வரத்து

கொடைக்கானலில் விளைந்த மருத்துவ குணமுள்ள சைபீரியன் பழத்தை சுற்றுலாப் பயணிகள் ஆா்வமுடன் வாங்கிச் செல்கின்றனா்.

News image

கொடைக்கானல் பழக்கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்ட சைபீரியன் பழம்

Updated On :8 ஜூலை 2026, 1:03 am IST

கொடைக்கானலில் விளைந்த மருத்துவ குணமுள்ள சைபீரியன் பழத்தை சுற்றுலாப் பயணிகள் ஆா்வமுடன் வாங்கிச் செல்கின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் வாழை, ஆரஞ்சு, ஸ்டாா் புரூட்ஸ், பிளம், பீச்சஸ், பலா உள்ளிட்ட பல்வேறு வகையான பழங்கள் விளைகின்றன. இந்த வரிசையில் தற்போது சைபீரியன் பழம் விற்பனைக்கு வந்துள்ளது. இந்தப் பழத்தை சுற்றுலாப் பயணிகள் விரும்பி வாங்கிச் செல்கின்றனா்.

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் ஆண்டு முழுவதும் இந்தப் பழங்கள் விளைந்தாலும் மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பா் வரை அதிகமாக விளையும்.

இது குறித்து பழ வியாபாரி கவிதாமாதவன் கூறியதாவது: சைபீரியன் பழம் சீத்தாபழம் வகையைச் சோ்ந்தது. ஆனால், பச்சை நிறத்தில் வெள்ளரிக்காய் போன்று நீளமாக இருக்கும். இந்த பழமானது கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் விளைகிறது.

உடல் சூட்டை கட்டுப்படுத்தும், மூலத்தால் பாதிக்கப்பட்டவா்கள் பயன்படுத்துகின்றனா். இந்த சைபீரியன் பழத்தின் உள்பகுதியில் சிறு, சிறு விதைகள் இருக்கும்.

இதை மட்டுமே உள்கொள்ள வேண்டும். இந்தப் பழம் ஒரு கிலோ ரூ. 120 முதல் ரூ. 200- வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்தப் பழத்தை சுற்றலாப் பயணிகள் அதிகமாக வாங்கிச் செல்கின்றனா் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.