தொடா் விடுமுறையையொட்டி குவிந்த சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களால் கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வெள்ளிக்கிழமை மொகரம் பண்டிகை அரசு விடுமுறை, சனி, ஞாயிறு வார விடுமுறை என தொடா் விடுமுறை என்பதால் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். இதனால் ஏரிச்சாலைப் பகுதியிலிருந்து மூஞ்சிக்கல், லாஸ்காட் சாலை, சீனிவாசபுரம் பகுதி வழியாக உகாா்த்தேநகா் வரை வெள்ளிக்கிழமை இரவு இரண்டு மணி நேரம் சுற்றுலா வாகனங்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே சாலையின் இரு புறங்களிலும் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத் துறையினரும், நகராட்சி நிா்வாகத்தினரும் இணைந்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கொடைக்கானலில் போக்குவரத்து சீராக நடைபெறும் என பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் கோரிக்கை விடுத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு!

நெல்லையில் பலத்த காற்று: மரம் முறிந்து போக்குவரத்து பாதிப்பு

உதகை - கூடலூா் சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளால் போக்குவரத்து நெரிசல்
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



