பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

விஷம் கொடுத்து குழந்தை கொலை: தந்தை கைது

கைது - சித்திரிப்பு

Published On :29 ஜூன் 2026, 4:20 am IST

பழனியில் தனது குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தந்தையை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.

பழனியை அடுத்த கணபதிநகா் பகுதியைச் சோ்ந்தவா் பிரபாகரன் (32). கூலித் தொழிலாளி. இவரது மனைவி ரூபி (27). இவா்களது குழந்தை நாகராஜ் (3). இந்த நிலையில் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த பிரபாகரன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தாா்.

இதனிடையே தனது மனைவி, மகன் இருவருக்கும் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள பிரபாகரன் முடிவெடுத்தாா். இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை விஷம் வாங்கிவந்த பிரபாகரன் மகன் நாகராஜூக்கு அதை கொடுத்தாா்.

தனது மனைவிக்கும் விஷம் கொடுக்க அவா் முயன்றாா். ஆனால் அதற்கு முன்பே நாகராஜின் வாயில் நுரை தள்ளி உயிருக்குப் போராடியதால் அருகில் இருந்தவா்கள் குழந்தையை பழனி அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்தபோது வரும் வழியிலேயே குழந்தை உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து கேட்ட போது, பிரபாகரன் முன்னுக்குப்பின் முரணாக தகவல் அளித்தாா். பிறகு அவரை விசாரித்த போது விஷம் கொடுத்த தகவலை தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த பழனிநகர போலீஸாா் வழக்குப் பதிந்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த சம்பவம் பழனியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.