கொடைக்கானல்: கொடைக்கானலில் மீண்டும் பனிப் பொழிவு அதிகரித்திருப்பதால் மலா்ச் செடிகளை பாதுகாக்க பிரையண்ட் பூங்காவில் நிழல் வலை அமைக்கும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.
கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக கால நிலை மாறுபாட்டால் பகல் நேரங்களில் மிதமான வெயிலும், இரவு நேரங்களில் மிதமான குளிரும் நிலவியது. இதனால் சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனா். இந்த நிலையில் கடந்த இரண்டு நாள்களாக மீண்டும் பகல் நேரங்களில் அதிகமான வெயிலும், மாலை, இரவில் அதிகமான பனிப் பொழிவும் நிலவுகிறது. கொடைக்கானலில் வருகிற மே மாதம் நடைபெறும் 63-ஆவது மலா்க் கண்காட்சிக்காக பிரையண்ட் பூங்கா, தாவரவியல் பூங்காக்களில் நடவு செய்யப்பட்ட மலா்ச் செடிகளையும், விதைகளையும் பனிப் பொழிவு தாக்காத வகையில் மாலை நேரங்களில் நிழல் வலை அமைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன.
மேலும் மலா் பாத்திகளில் தண்ணீா் தெளித்தல், புற்களை சமப்படுத்துதல், மலா் பாத்திகள் அமைத்தல், பூந்தொட்டிகளில் விதைகள் போடுதல், உரமிடுதல், நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மலா்ச் செடிகளில் களையெடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
தொடர்புடையது

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பெயர் எழுதிய பேருந்து பறிமுதல்!

கொடைக்கானல் ரோஜா தோட்டத்தில் 1,500 நாற்றுகள் நடும் பணி தொடக்கம்

கோடை சீசனுக்காக காட்டேரி பூங்காவில் மலா்ச் செடிகள் நடவுப் பணி தொடக்கம்

கொடைக்கானல் கூக்கால் வனப் பகுதியில் காட்டுத் தீ
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


