கொளத்தூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார்!பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் குறைந்தது! ரூ. 5 லட்சம் கோடி இழப்பு!!பெரம்பூரில் விஜய்க்கு எதிராக திலகபாமா! தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி!சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டி!தங்கம் விலை மீண்டும் குறைவு! இன்றைய நிலவரம்! நாக்பூர் அருகே தடம்புரண்ட மெமு ரயில்! குவைத்தில் மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் தாக்குதல்: இந்தியர் பலி 1,100-க்கும் அதிக போலி வெடிகுண்டு மிரட்டல்கள்: மைசூரைச் சேர்ந்தவர் கைது ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?
/

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பெயர் எழுதிய பேருந்து பறிமுதல்!

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பெயர் எழுதிய பேருந்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தது குறித்து...

News image

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பெயர் எழுதிய பேருந்து பறிமுதல்!

டிஎன்எஸ்

Updated On :30 மார்ச் 2026, 5:10 am

இணையதளச் செய்திப் பிரிவு

கோவை: நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பெயர் எழுதிய பேருந்தை பறிமுதல் செய்த காவல்துறையினர், வாகனங்களில் வன்முறையை தூண்டும் வாசகங்கள் எழுதினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரித்தனர்.

கோவையை அடுத்து குரும்ப்பாளையத்தில் இருக்கும் எஸ்.என்.எஸ் கல்லூரி மாணவர்கள் ஒரு பேருந்தில் சுற்றுலா சென்றனர். அந்த பேருந்தில் மாணவர்கள் பாட்டுப்பாடி நடனமாடி மகிழ்ச்சியாக சென்றனர். அந்த பேருந்து கர்நாடக மாநிலம் சிக்மங்களூர் அருகே உள்ள பகவான் ஹால் பகுதியில் சென்ற போது திடீரென போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது, அந்தப் பேருந்தில் முன் பகுதியில் நிழல் உலக தாதா என்று அழைக்கப்படும் தாவூத் இப்ராஹிம் பெயர் எழுதப்பட்டு இருந்தது. மேலும் டான் அண்டர்வேல்டு என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இது தவிர பல வாசகங்கள் இடம் பெற்று இருந்தன

இதையடுத்து போலீசார் அந்த பேருந்தை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து ஓட்டுநர் மற்றும் அந்த பேருந்தின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அத்துடன் போலீசார் அந்த பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்து அபராதம் விதித்தனர். அதில் இருந்த மாணவர்கள் மாற்றுப் பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது குறித்து கோவை காவல் அதிகாரிகள் கூறியதாவது:

பேருந்துகள் மற்றும் வாகனங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வாசகங்கள் மட்டுமே எழுதப்பட்டு இருக்க வேண்டும். வாகனங்களில் எழுதும் வாசகங்கள் வன்முறையை தூண்டும் வகையில் இருக்கக் கூடாது. அப்படி எழுதப்பட்டிருப்பது வாகன சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டால், அந்த வாகனங்கள் உடனடியாக பறிமுதல் செய்யப்படுவதுடன் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இது தொடர்பாக கோவை மாநகரம் மற்றும் புறநகர பகுதிகளில் வாகனங்களில் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அவர்கள் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.