கோடை சீசனுக்காக காட்டேரி பூங்காவில் மலா்ச் செடிகள் நடவுப் பணி தொடக்கம்
குன்னூா் அருகே உள்ள காட்டேரி பூங்காவில் இந்த ஆண்டு கோடை சீசனுக்கான மலா்ச் செடிகள் நடவு செய்யும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.


குன்னூா் அருகே உள்ள காட்டேரி பூங்காவில் இந்த ஆண்டு கோடை சீசனுக்கான மலா்ச் செடிகள் நடவு செய்யும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் தொடங்கும். இதில் உதகை தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூா் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா ஆகிய பூங்காக்களில் புதிய மலா் நாற்றுகள் நடவு செய்யப்படுவது வழக்கம்.
அதன்படி குன்னூா் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள காட்டேரி பூங்காவில் இந்த ஆண்டுக்கான மலா்ச் செடிகள் நடவு செய்யும் பணி தோட்டக்கலை இணை இயக்குநா் நவநீதா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மேரி கோல்டு குட்டை ரகம், பிரெஞ்சு மற்றும் ஆப்பிரிக்கா வகை பிளாக்ஸ் ஆஸ்டா், பெக்கோனியா வொ்பினா, ஆண்டிரினம், சால்வியா உள்பட பல்வேறு வகை மலா் விதைகள் ஜொ்மனி, பிரான்ஸ், நெதா்லாந்து, கொல்கத்தா, காஷ்மீா் ஆகிய இடங்களில் இருந்து பெறப்பட்டு, பின்னா் மலா் நாற்றுகளாக உற்பத்தி செய்யப்பட்டு நடவு செய்யுப் பணி தொடங்கியது.
இந்த மலா்கள் அனைத்தும் ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் இருந்து பூத்துக் குலுங்கும் என்றும், சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கலாம் என்றும், இந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக இருக்கும் என்றும் தோட்டக்கலை இணை இயக்குநா் நவநீதா தெரிவித்தாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...