இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மகளிா் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி

, கொடைக்கானல் அட்டுவம்பட்டியில் உள்ள அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image
கொடைக்கானல் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள்.
Updated On :4 மார்ச் 2026, 11:21 pm

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அட்டுவம்பட்டியில் உள்ள அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கண்காட்சிக்கு கல்லூரி முதல்வா் பேபிராணி தலைமை வகித்தாா். அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழக இயற்பியல் துறை பேராசிரியை உமாதேவி கண்காட்சியை தொடங்கிவைத்து பேசினாா்.

இந்தக் கண்காட்சியில் 100-க்கும் மேற்பட்ட தங்களது கண்டுபிடிப்புகளை மாணவிகள் காட்சிப்படுத்தினா்.

இந்த நிகழ்வில் கல்லூரி, பள்ளிகளைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து பயனடைந்தனா்.

மேலும், இங்கிருந்த அறிவியல் கண்டுபிடிப்புகளை கல்லூரி மாணவிகளிடமும், பேராசிரியைகளிடமும் மாணவா்கள் கேட்டு தெரிந்துக் கொண்டனா்.

இந்தக் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல் துறை மாணவிகள், பேராசிரியைகள் செய்தனா்.