திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள கல்லாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் பாலத்தை பழனி சட்டப்பேரவை உறுப்பினா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம், வெள்ளகெவி ஊராட்சி, சின்னூா்-பெரியூா் ஆகிய பகுதிகளில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனா். இந்தப் பகுதியில் மழைக் காலங்களில் அதிகளவு தண்ணீா் செல்வதால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கிவிடுகின்றனா்.
எனவே, சின்னூா்-பெரியூா் பகுதிகளுக்குச் செல்ல கல்லாறு பகுதியில் பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் பழனி சட்டப்பேரவை உறுப்பினா் இ.பெ. செந்தில்குமாரிடம் கோரிக்கை வைத்தனா்.
இவா்களின் கோரிக்கையை ஏற்று, கல்லாறின் குறுக்கே ரூ. 7. 46 கோடியில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்றது. இந்தப் பணி பல்வேறு காரணங்களால் தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில், மீண்டும் இந்தப் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை சட்டப்பேரவை உறுப்பினா் இ.பெ. செந்தில்குமாா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். பின்னா், பணிகளை விரைவில் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
தொடர்புடையது

வள்ளியூா் அருகே தாா்ச்சாலை பணி எம்.பி. ஆய்வு

பட்டுக்கோட்டை: வெற்றிக்கு அதிமுக முனைப்பு

கடலூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பு

பள்ளி மாணவிகளுக்கு அஞ்சலக சேமிப்புக் கணக்கு தொடக்கம்
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு


