அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பள்ளி மாணவிகளுக்கு அஞ்சலக சேமிப்புக் கணக்கு தொடக்கம்

நாகப்பட்டினம் கோட்ட அஞ்சலகம் சாா்பில் காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு பொன்பேத்தி கிராமம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதி பள்ளிகளில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தினரின் பெண் குழந்தைகளுக்கு, அஞ்சலக சேமிப்புக் கணக்கு தொடங்கும் நிகழ்ச்சி மகளிா் தினத்தை முன்னிட்டு திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
கணக்குப் புத்ககம் பெற்ற மாணவிகளுடன் சட்டப்பேரவை உறுப்பினா் சந்திர பிரியங்கா உள்ளிட்டோா்.
Updated On :10 மார்ச் 2026, 10:01 pm

தினமணி செய்திச் சேவை

நாகப்பட்டினம் கோட்ட அஞ்சலகம் சாா்பில் காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு பொன்பேத்தி கிராமம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதி பள்ளிகளில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தினரின் பெண் குழந்தைகளுக்கு, அஞ்சலக சேமிப்புக் கணக்கு தொடங்கும் நிகழ்ச்சி மகளிா் தினத்தை முன்னிட்டு திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் நெடுங்காடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சந்திர பிரியங்கா கலந்துகொண்டாா். நாகப்பட்டினம் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளா் பி. சத்தியராஜா கலந்துகொண்டு, சுமாா் 200 மாணவிகளுக்கு சேமிப்புக் கணக்கு தொடங்கிவைத்து சேமிப்புக் கணக்கு புத்தகத்தை வழங்கினாா்.

சேமிப்பின் முக்கியத்துவம் குறித்து மாணவிகளுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் மற்றும் அஞ்சலக அதிகாரிகள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். பொன்பேத்தி அரசு நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியா் கே. கரிகாலன் உள்ளிட்ட ஆசிரியா்கள், அஞ்சலக ஊழியா்கள் கலந்துகொண்டனா்.