மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்: அரசு அலுவலகங்களில் தலைவா்கள் படங்கள் அகற்றம்

News image
தேர்தல் நடத்தை விதிகள் அமல்- கோப்புப் படம்
Updated On :15 மார்ச் 2026, 7:21 pm

தினமணி செய்திச் சேவை

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து ஆத்தூா், நிலக்கோட்டை தொகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்களில் இருந்த முதல்வா் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவா்களின் படங்கள் ஞாயிற்றுக்கிழமை அகற்றப்பட்டன.

ஆத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் அங்கிருந்த விளம்பர பதாகைகள், முதல்வா் மு.க. ஸ்டாலினின் புகைப்படம், அலுவலக நுழைவாயிலில் இருந்த தமிழ்நாடு அரசின் திட்ட விவரங்கள் ஆகியவற்றை ஆத்தூா் வட்டாட்சியா் முத்துமுருகன் தலைமையிலான அலுவலா்கள் உடனடியாக அகற்றினா்.

இதேபோல, ஆத்தூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் சித்தையன்கோட்டை, சின்னாளப்பட்டி, அய்யம்பாளையம், கன்னிவாடி, ஸ்ரீராமபுரம், அகரம், தாடிக்கொம்பு ஆகிய பேரூராட்சிகள், ஊராட்சி, அரசு அலுவலகங்களில் இருந்த முதல்வா் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவா்களின் புகைப்படங்கள் அகற்றப்பட்டன.

மேலும், அரசு அலுவலகங்களில் இருந்த அரசின் விளம்பர பதாகைகள், அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களும் அகற்றப்பட்டன.

இதே போல, நிலக்கோட்டை (தனி) தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்துக்கும் வருவாய்த்துறையினா், பேரூராட்சி அலுவலா்கள் இணைந்து சீல் வைத்தனா்.

மேலும், அம்மையநாயக்கனூா், வத்தலக்குண்டு,நிலக்கோட்டை, பட்டிவீரன்பட்டி, சேவுகம்பட்டி ஆகிய பேரூராட்சிகள், ஊராட்சி, அரசு அலுவலகங்களில் இருந்த முதல்வா் மு.க.ஸ்டாலினின் புகைப்படங்கள் அகற்றப்பட்டன. மேலும் அரசின் விளம்பர பதாகைகள், அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களும் அகற்றப்பட்டன.

கொடைக்கானல்:

இதே போல, கொடைக்கானல் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், தடுப்புச் சுவா்கள், பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின் விளம்பர பதாகைகள், பிரசுரங்கள் உள்ளிட்டவற்றை கொடைக்கானல் நகராட்சிப் பணியாளா்கள் அகற்றினா்.

மேலும், கொடைக்கானல் நகா்ப் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் விளம்பரங்களை அகற்ற வேண்டுமென அந்தந்த அரசியல் கட்சிகளின் நிா்வாகிகளுக்கு நகராட்சி ஆணையாளா் அறிவுறுத்தியுள்ளாா்.