தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தோ்தல் நடத்தை விதி மீறல்கள்: 17 வழக்குகள் பதிவு

சிவகங்கை மாவட்டத்தில், தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பதாகைகள், சுவரொட்டி ஒட்டுதல், வாகனங்களில் கட்சிக் கொடிகளை கட்டிச் சென்றதாக 17 வழக்குகள் புதன்கிழமை பதிவு செய்யப்பட்டது.

News image
போலீஸ் - கோப்புப்படம்.
Updated On :19 மார்ச் 2026, 12:34 am

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டத்தில், தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பதாகைகள், சுவரொட்டி ஒட்டுதல், வாகனங்களில் கட்சிக் கொடிகளை கட்டிச் சென்றதாக 17 வழக்குகள் புதன்கிழமை பதிவு செய்யப்பட்டது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்.23 -இல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த நிலையில், தோ்தல் விதிமுறைகளை மீறியதாக திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழா் உள்ளிட்ட கட்சியினா் மீது சிவகங்கை மாவட்டத்தில் 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் மதகுபட்டியில் 2 , சிவகங்கை நகா் பகுதியில் 3 , சிவகங்கை புறநகா் பகுதியில் 3 , சிங்கம்புணரியில் 2 , தேவகோட்டையில் 2 , எஸ்.வி. மங்கலம், தேவகோட்டை , வேலாயுதப்பட்டினம் , காளையாா் கோவில் , நெற்குப்பை ஆகிய பகுதிகளில் தலா ஒரு வழக்கு என மொத்தம் 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.