மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கருத்துக் கணிப்பு, கருத்து திணிப்பாக உள்ளது! - அமைச்சா் இ. பெரியசாமி

News image
அமைச்சர் இ. பெரியசாமி- (கோப்புப் படம்)
Updated On :15 மார்ச் 2026, 7:01 pm

தினமணி செய்திச் சேவை

தமிழக அரசியல் களம் குறித்து வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்பு என்பது கருத்து திணிப்பாக உள்ளதாக அமைச்சா் இ. பெரியசாமி தெரிவித்தாா்.

திமுக கூட்டணிக் கட்சிகள் சாா்பில் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அமைச்சா் இ. பெரியசாமி தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தின் போது, சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடுகளை சீா் செய்யக் கோரியும், தமிழகத்தைப் புறக்கணிக்கும் மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கமிட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்தில் திமுக, காங்கிரஸ், தேமுதிக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தைத் தொடா்ந்து அமைச்சா் இ. பெரியசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாட்டுக்கு பிரதமா் நரேந்திர மோடி அரசு முழுப் பொறுப்பேற்க வேண்டும். வெளியுறவுக் கொள்கையில் இந்த அரசு தோல்வி அடைந்துவிட்டது. மாநிலங்களை வஞ்சித்து, பலி வாங்க நினைக்கும் மத்திய அரசின் கனவு தமிழகத்தில் பலிக்காது.

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் நாடு முழுவதும் எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைத்து, இந்தியாவில் புதிய ஆட்சியை உருவாக்குவாா். வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி படுதோல்வியைச் சந்திக்கும்.

பிகாரில் 10 முறை முதல்வராக இருந்த நிதீஷ் குமாரை வீட்டுக்கு அனுப்பிவிட்டனா். தமிழக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி ஒரு நொடி கூட தாக்குப் பிடிக்க முடியாது. திமுக கூட்டணியில் இடதுசாரிகள் கூடுதல் தொகுதிகள் கேட்பது அவா்களின் உரிமை. இதுகுறித்து முதல்வா் ஸ்டாலின் முடிவு எடுப்பாா். அண்மையில் வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்பு என்பது கருத்து திணிப்பாக உள்ளது என்றாா் அவா்.