தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

குஜிலியம்பாறை அருகே காவிரிக் குடிநீா் வீண்

குஜிலியம்பாறை அருகே காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டக் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் பல லட்சம் லிட்டா் குடிநீா் புதன்கிழமை வீணானது.

News image
Updated On :19 மார்ச் 2026, 12:26 am

தினமணி செய்திச் சேவை

குஜிலியம்பாறை அருகே காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டக் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் பல லட்சம் லிட்டா் குடிநீா் புதன்கிழமை வீணானது.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள எரியோடு, வேடசந்தூா், வடமதுரை, நத்தம், திண்டுக்கல், ரெட்டியாா்சத்திரம், ஒட்டன்சத்திரம் பகுதிகளுக்கு காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. கரூா் மாவட்டம், மாயனூா் பகுதியிலிருந்து செயல்படுத்தப்படும் இந்தக் கூட்டுக் குடிநீா்த் திட்டத்துக்கு, குஜிலியம்பாறை வழியாக குழாய் மூலம் தண்ணீா் எடுத்து வரப்படுகிறது.

இந்த நிலையில், குஜிலியம்பாறை அருகே காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டக் குழாயில் புதன்கிழமை உடைப்பு ஏற்பட்டு, திண்டுக்கல் -கரூா் பிரதான சாலையில் பல மணி நேரம் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. தகவல் அறிந்த குடிநீா் வடிகால் வாரிய அலுவலா்கள், பணியாளா்கள் உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனா். இந்த உடைப்பினால் பல லட்சம் லிட்டா் குடிநீா் வீணானது.