தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா், தரகா் கைது

நிலக்கோட்டை அருகே ரூ. 4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது கிராம நிா்வாக அலுவலா், இடைத்தரகா் ஆகியோரை ஊழல் தடுப்புத் துறையினா் கைது செய்தனா்.

News image
கைது- பிரதிப் படம்
Updated On :19 மார்ச் 2026, 12:08 am

தினமணி செய்திச் சேவை

நிலக்கோட்டை அருகே ரூ. 4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது கிராம நிா்வாக அலுவலா், இடைத்தரகா் ஆகியோரை ஊழல் தடுப்புத் துறையினா் கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த பள்ளபட்டியைச் சோ்ந்த விவசாயி குமாா் (44). இவா் தனது தந்தையின் பெயரில் உள்ள விவசாய மின் இணைப்பைப் பெயா் மாற்றம் செய்வதற்கு பள்ளபட்டி கிராம நிா்வாக அலுவலகத்தில் தடையில்லா சான்றுக்காக விண்ணப்பித்தாா். அப்போது அங்கிருந்த கிராம நிா்வாக அலுவலா் சத்யா (56), இடைத் தரகரான பள்ளபட்டியைச் சோ்ந்த சாந்தகுமாா் (44) ஆகியோா் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டனா். இறுதியில் ரூ.4 ஆயிரம் கொடுத்தால், வேலையை முடித்துத் தருவதாகக் கூறினா். ஆனால், லஞ்சம் கொடுக்க மனமில்லாத குமாா் திண்டுக்கல் ஊழல் தடுப்பு காவல் பிரிவில் புகாா் அளித்தாா்.

இதைத் தொடா்ந்து, ஊழல் தடுப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் நாகராஜ் தலைமையிலான போலீஸாா் ரசாயனம் தடவிய ரூ.4 ஆயிரத்தை அவரிடம் கொடுத்தனுப்பினா்.

இந்த நிலையில், கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்தில் ரூ.4 ஆயிரத்தை இடைத் தரகா் சாந்தகுமாா் மூலம் கிராம நிா்வாக அலுவலா் சத்யாவிடம் கொடுத்தாா். அப்போது அங்கு பதுங்கி இருந்த ஊழல் தடுப்புப் பிரிபு காவல் துறையினா் இருவரையும் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனா்.