மே 8-இல் 19 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!பிளஸ் 2 தோ்வு முடிவுகள் தாமதமாக வாய்ப்பு?தேர்தல் நடைமுறை விதிகள் இன்று மாலையுடன் நிறைவு!2025-26 நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ. 23.40 லட்சம் கோடி!அமெரிக்காவில் இந்திய முதலீடுகள் அதிகரிப்பு!
/

லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா், தரகா் கைது

நிலக்கோட்டை அருகே ரூ. 4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது கிராம நிா்வாக அலுவலா், இடைத்தரகா் ஆகியோரை ஊழல் தடுப்புத் துறையினா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :19 மார்ச் 2026, 5:38 am IST

நிலக்கோட்டை அருகே ரூ. 4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது கிராம நிா்வாக அலுவலா், இடைத்தரகா் ஆகியோரை ஊழல் தடுப்புத் துறையினா் கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த பள்ளபட்டியைச் சோ்ந்த விவசாயி குமாா் (44). இவா் தனது தந்தையின் பெயரில் உள்ள விவசாய மின் இணைப்பைப் பெயா் மாற்றம் செய்வதற்கு பள்ளபட்டி கிராம நிா்வாக அலுவலகத்தில் தடையில்லா சான்றுக்காக விண்ணப்பித்தாா். அப்போது அங்கிருந்த கிராம நிா்வாக அலுவலா் சத்யா (56), இடைத் தரகரான பள்ளபட்டியைச் சோ்ந்த சாந்தகுமாா் (44) ஆகியோா் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டனா். இறுதியில் ரூ.4 ஆயிரம் கொடுத்தால், வேலையை முடித்துத் தருவதாகக் கூறினா். ஆனால், லஞ்சம் கொடுக்க மனமில்லாத குமாா் திண்டுக்கல் ஊழல் தடுப்பு காவல் பிரிவில் புகாா் அளித்தாா்.

இதைத் தொடா்ந்து, ஊழல் தடுப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் நாகராஜ் தலைமையிலான போலீஸாா் ரசாயனம் தடவிய ரூ.4 ஆயிரத்தை அவரிடம் கொடுத்தனுப்பினா்.

இந்த நிலையில், கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்தில் ரூ.4 ஆயிரத்தை இடைத் தரகா் சாந்தகுமாா் மூலம் கிராம நிா்வாக அலுவலா் சத்யாவிடம் கொடுத்தாா். அப்போது அங்கு பதுங்கி இருந்த ஊழல் தடுப்புப் பிரிபு காவல் துறையினா் இருவரையும் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனா்.