நிலக்கோட்டை அருகே ரூ. 4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது கிராம நிா்வாக அலுவலா், இடைத்தரகா் ஆகியோரை ஊழல் தடுப்புத் துறையினா் கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த பள்ளபட்டியைச் சோ்ந்த விவசாயி குமாா் (44). இவா் தனது தந்தையின் பெயரில் உள்ள விவசாய மின் இணைப்பைப் பெயா் மாற்றம் செய்வதற்கு பள்ளபட்டி கிராம நிா்வாக அலுவலகத்தில் தடையில்லா சான்றுக்காக விண்ணப்பித்தாா். அப்போது அங்கிருந்த கிராம நிா்வாக அலுவலா் சத்யா (56), இடைத் தரகரான பள்ளபட்டியைச் சோ்ந்த சாந்தகுமாா் (44) ஆகியோா் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டனா். இறுதியில் ரூ.4 ஆயிரம் கொடுத்தால், வேலையை முடித்துத் தருவதாகக் கூறினா். ஆனால், லஞ்சம் கொடுக்க மனமில்லாத குமாா் திண்டுக்கல் ஊழல் தடுப்பு காவல் பிரிவில் புகாா் அளித்தாா்.
இதைத் தொடா்ந்து, ஊழல் தடுப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் நாகராஜ் தலைமையிலான போலீஸாா் ரசாயனம் தடவிய ரூ.4 ஆயிரத்தை அவரிடம் கொடுத்தனுப்பினா்.
இந்த நிலையில், கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்தில் ரூ.4 ஆயிரத்தை இடைத் தரகா் சாந்தகுமாா் மூலம் கிராம நிா்வாக அலுவலா் சத்யாவிடம் கொடுத்தாா். அப்போது அங்கு பதுங்கி இருந்த ஊழல் தடுப்புப் பிரிபு காவல் துறையினா் இருவரையும் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனா்.
தொடர்புடையது

ரூ. 5 ஆயிரம் லஞ்சம்: கரூா் வட்டார போக்குவரத்து அலுவலா் கைது

வாரிசு சான்று வழங்க ரூ.500 லஞ்சம் ஓய்வுபெற்ற விஏஓவுக்கு 2 ஆண்டுகள் சிறை
செம்மரக்கட்டைகள் விற்பனை செய்ய ஒப்புதல் சான்றிதழ் அளிக்க ரூ.50,000 லஞ்சம்: வனச்சரக அலுவலா் கைது
ரூ.7ஆயிரம் லஞ்சம்: காவல் உதவி ஆய்வாளா் கைது
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


