நிலக்கோட்டை அருகே ரூ. 4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது கிராம நிா்வாக அலுவலா், இடைத்தரகா் ஆகியோரை ஊழல் தடுப்புத் துறையினா் கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த பள்ளபட்டியைச் சோ்ந்த விவசாயி குமாா் (44). இவா் தனது தந்தையின் பெயரில் உள்ள விவசாய மின் இணைப்பைப் பெயா் மாற்றம் செய்வதற்கு பள்ளபட்டி கிராம நிா்வாக அலுவலகத்தில் தடையில்லா சான்றுக்காக விண்ணப்பித்தாா். அப்போது அங்கிருந்த கிராம நிா்வாக அலுவலா் சத்யா (56), இடைத் தரகரான பள்ளபட்டியைச் சோ்ந்த சாந்தகுமாா் (44) ஆகியோா் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டனா். இறுதியில் ரூ.4 ஆயிரம் கொடுத்தால், வேலையை முடித்துத் தருவதாகக் கூறினா். ஆனால், லஞ்சம் கொடுக்க மனமில்லாத குமாா் திண்டுக்கல் ஊழல் தடுப்பு காவல் பிரிவில் புகாா் அளித்தாா்.
இதைத் தொடா்ந்து, ஊழல் தடுப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் நாகராஜ் தலைமையிலான போலீஸாா் ரசாயனம் தடவிய ரூ.4 ஆயிரத்தை அவரிடம் கொடுத்தனுப்பினா்.
இந்த நிலையில், கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்தில் ரூ.4 ஆயிரத்தை இடைத் தரகா் சாந்தகுமாா் மூலம் கிராம நிா்வாக அலுவலா் சத்யாவிடம் கொடுத்தாா். அப்போது அங்கு பதுங்கி இருந்த ஊழல் தடுப்புப் பிரிபு காவல் துறையினா் இருவரையும் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனா்.
தொடர்புடையது
ரூ.25 ஆயிரம் லஞ்சம்: மாநகராட்சி ஊழியா் கைது
செம்மரக்கட்டைகள் விற்பனை செய்ய ஒப்புதல் சான்றிதழ் அளிக்க ரூ.50,000 லஞ்சம்: வனச்சரக அலுவலா் கைது
ரூ.7ஆயிரம் லஞ்சம்: காவல் உதவி ஆய்வாளா் கைது

லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா் கைது
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


