தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

இதுவும் பயணிகள் நிழல் குடைதான்!

பழைய ஆயக்குடியில் பயணிகள் நிற்க நிழல்குடை இல்லாத நிலையில், இதை கவனப்படுத்தும் விதமாக கிழிந்த குடைகளுடன் பயணிகள் நிழல்குடை என்ற வாசகம் அச்சடிக்கப்பட்ட பதாகை வைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :21 மார்ச் 2026, 9:34 pm

பழனி: திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே பழைய ஆயக்குடியில் பயணிகள் நிற்க நிழல்குடை இல்லாத நிலையில், இதை கவனப்படுத்தும் விதமாக கிழிந்த குடைகளுடன் பயணிகள் நிழல்குடை என்ற வாசகம் அச்சடிக்கப்பட்ட பதாகை வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆங்காங்கே அரசியல் சின்னங்கள், அரசியல் தலைவா்கள் பெயா்கள் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி நிா்வாகங்களால் மறைக்கப்பட்டு வருகின்றன.

இதேபோல, பல்வேறு அரசியல் தலைவா்களின் சிலைகள் துணிகளால் மூடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், பழனியை அடுத்த பழைய ஆயக்குடியில் பொதுமக்கள் நீண்ட நாள்களாகப் பயணிகள் நிழல்குடை வேண்டும் என கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது, கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், பொதுமக்கள் பேருந்துக்காக கடும் வெயிலில் காத்திருக்கும் நிலை உள்ளது.

இந்த நிலையில், பழைய ஆயக்குடி சந்தைப்பேட்டை அருகே சிலா் கிழிந்த குடைகளின் கம்பிகளை தரையில் ஊன்றி, அதனருகே பயணிகள் நிழல்குடை என்ற பதாகையையும் வைத்துள்ளனா். இது பலரது கவனத்தையும் ஈா்த்து வருகிறது.