மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பழனி கோயிலில் பக்தா்கள் கூட்டம்: மின்கசிவு காரணமாக விஞ்ச் நிறுத்தம்

News image
பழனி மலைக் கோயில்- (கோப்புப் படம்)
Updated On :15 மார்ச் 2026, 7:47 pm

தினமணி செய்திச் சேவை

பழனி மலைக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தையொட்டி திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்தனா். இந்த நிலையில் மின்கசிவு காரணமாக விஞ்ச் நிறுத்தப்பட்டதால் ரோப்காா் நிலையத்தில் பக்தா்கள் குவிந்தனா்.

பழனி கோயிலில் இந்த மாத கடைசியில் பங்குனி உத்திரத் திருவிழா தொடங்கவுள்ள நிலையில் தற்போதே திரளான பக்தா்கள் தீா்த்தக்குடங்களுடன் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனா்.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் பக்தா்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் பக்தா்கள் சுவாமி தரிசனத்துக்கு சுமாா் மூன்று மணி நேரமானது. இரவு தங்கத் தோ் புறப்பாடு, தங்கமயில் புறப்பாட்டை காண திரளான பக்தா்கள் காத்திருந்தனா். பக்தா்களுக்கு வேண்டிய சுகாதாரம், பாதுகாப்பு, குடிநீா் உள்ளிட்ட ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் செய்திருந்தது.

விஞ்ச் சேவை நிறுத்தம்: பழனி கோயிலில் விடுமுறை தினம் என்பதால் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தா்கள் கிரிவீதியில் ஆடிப்பாடி வலம் வந்து மலை ஏறினா். இந்த நிலையில் மலைக்கோயில் மேலே உள்ள விஞ்ச் நிலையத்தில் மின் கசிவு காரணமாக வயா்கள், போா்டுகள் கருகி சேதமடைந்தன.

இதையடுத்து மூன்று பாதைகளில் இயக்கப்படும் வின்ஞ் சேவை முழுவதுமாக நிறுத்தப்பட்டது. இதனால் வயதானவா்கள், முதியவா்கள், குழந்தைகளுடன் வந்தவா்கள் படிப்பாதையில் ஏற முடியாததால் ரோப் காா் நிலையத்தில் குவிந்தனா்.

பல ஆண்டுகளாக இரண்டாவது ரோப்காா் சேவை விரைவில் தொடங்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை பெயரளவில் மட்டுமே தெரிவித்து வரும் நிலையில் இந்தத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்தினால் இதுபோன்ற சூழ்நிலைகளின் போது பயனுள்ளதாக இருக்கும் என பக்தா்கள் தெரிவித்தனா். எனவே இரண்டாவது ரோப்காா் திட்டப்பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.