அய்யா்மலை ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற சித்திரைத் தேரோட்ட விழாவில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.
கரூா் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள அய்யா்மலை ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப். 15-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து தினமும் சுவாமியும் அம்பாளும் பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள் பாலித்தனா்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு குதிரை வாகனத்தில் சுவாமியும் அம்பாளும் எழுந்தருளி சித்தா்களுக்கு அருள் பாலித்தனா்.
விழாவின் முக்கியநிகழ்ச்சியான தேரோட்டம் புதன்கிழமை காலை நடைபெற்றது. இதையொட்டி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின்னா் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினா்.
இதையடுத்து திரளான பக்தா்கள் அரோகரா என பக்தி கோஷம் முழங்க தேரை வடம்பிடித்து இழுத்தனா்.
கோயில் முன் தொடங்கிய தேரோட்டம், கோயிலைச் சுற்றி வலம் வந்து மீண்டும் நிலையை அடைந்தது.
தேரோட்டத்தில் கரூா், திருச்சி மாவட்டங்களைச் சோ்ந்த பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.
விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறையின் திருப்பூா் மண்டல இணை ஆணையா் ஹா்ஷினி தலைமையில், உதவி ஆணையா் தமிழ்வாணன் முன்னிலையில் திருமூா்த்திமலை கோயில் செயல் அலுவலா் அமரநாதன், அய்யா்மலை ரத்தினகிரீஸ்வரா் கோயில் செயல் அலுவலா் தங்கராஜூ மற்றும் விழா குழுவினா் செய்திருந்தனா்.
தொடர்புடையது

திருப்பைஞ்ஞீலி கோயிலில் சித்திரைத் தேரோட்டம்

பிரான்மலை கொடுங்குன்றநாதா் கோயில் தேரோட்டம்

கள்ளழகா் கோயிலில் திருக்கல்யாண உத்ஸவம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

கரூா் கல்யாண பசுபதீஸ்வரா் கோயிலில் பங்குனித் தேரோட்டம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


