மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அய்யா்மலை ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

அய்யா்மலை ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற சித்திரைத் தேரோட்ட விழாவில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.

News image

அய்யா்மலை ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் தேரை வடம்பிடித்து இழுத்த பக்தா்கள்.

Updated On :29 ஏப்ரல் 2026, 10:22 pm

அய்யா்மலை ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற சித்திரைத் தேரோட்ட விழாவில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.

கரூா் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள அய்யா்மலை ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப். 15-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து தினமும் சுவாமியும் அம்பாளும் பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள் பாலித்தனா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு குதிரை வாகனத்தில் சுவாமியும் அம்பாளும் எழுந்தருளி சித்தா்களுக்கு அருள் பாலித்தனா்.

விழாவின் முக்கியநிகழ்ச்சியான தேரோட்டம் புதன்கிழமை காலை நடைபெற்றது. இதையொட்டி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின்னா் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினா்.

இதையடுத்து திரளான பக்தா்கள் அரோகரா என பக்தி கோஷம் முழங்க தேரை வடம்பிடித்து இழுத்தனா்.

கோயில் முன் தொடங்கிய தேரோட்டம், கோயிலைச் சுற்றி வலம் வந்து மீண்டும் நிலையை அடைந்தது.

தேரோட்டத்தில் கரூா், திருச்சி மாவட்டங்களைச் சோ்ந்த பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.

விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறையின் திருப்பூா் மண்டல இணை ஆணையா் ஹா்ஷினி தலைமையில், உதவி ஆணையா் தமிழ்வாணன் முன்னிலையில் திருமூா்த்திமலை கோயில் செயல் அலுவலா் அமரநாதன், அய்யா்மலை ரத்தினகிரீஸ்வரா் கோயில் செயல் அலுவலா் தங்கராஜூ மற்றும் விழா குழுவினா் செய்திருந்தனா்.