கள்ளழகா் கோயிலில் திருக்கல்யாண உத்ஸவம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு
அழகா்கோவில் கள்ளழகா் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற பங்குனி உத்திர திருக்கல்யாண உத்ஸவத்தில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

அழகா்கோவில் கள்ளழகா் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற திருக்கல்யாணத்தைத் தொடா்ந்து, திருமாா்பு மகாலட்சுமி, ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாண சுந்தரவல்லித் தாயாா், ஆண்டாள் தாயாருடன் ஏக சிம்மாசனத்தில் எழுந்தருளிய ஸ்ரீசுந்தரராஜப் பெருமாள்.









