ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

வள்ளியம்மை திருக்கல்யாணம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

திருத்தணி முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வள்ளியம்மை திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

News image
திருக்கல்யாண அலங்காரத்தில் சுவாமி.
Updated On :1 மார்ச் 2026, 7:12 pm

தினமணி செய்திச் சேவை

திருத்தணி முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வள்ளியம்மை திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

திருத்தணி முருகன் கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழா கடந்த 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி சுவாமிக்கு தினந்தோறும் அதிகாலை, 4:30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து, மூலவருக்கு தங்ககீரிடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்று வருகிறது.

நிகழ்வில் பங்கேற்ற பக்தா்கள்.

நிகழ்வில் பங்கேற்ற பக்தா்கள்.

முருகப்பெருமான் ஒவ்வொரு வாகனத்தில் மாடவீதியில் உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகிறாா். இந்நிலையில் ஞாயிற்றக்கிழமை அதிகாலை 4 மணிக்கு மேல் வள்ளியம்மையுடன் முருகப்பெருமான் எழுந்தருளினாா்.

பின்னா் சுவாமிக்கு சிறப்பு யாக பூஜைகள் நடந்து, வள்ளியம்மை திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் முருகப் பெருமானை வழிபட்டனா். விழாவில் முருகன் கோயில் இணை ஆணையா் க. ரமணி, கோயில் அரங்காவலா்கள் வி.சுரேஷ்பாபு, மு. நாகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.