அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

வள்ளியம்மை திருக்கல்யாணம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

திருத்தணி முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வள்ளியம்மை திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

News image

திருக்கல்யாண அலங்காரத்தில் சுவாமி.

Updated On :1 மார்ச் 2026, 7:12 pm

திருத்தணி முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வள்ளியம்மை திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

திருத்தணி முருகன் கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழா கடந்த 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி சுவாமிக்கு தினந்தோறும் அதிகாலை, 4:30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து, மூலவருக்கு தங்ககீரிடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்று வருகிறது.

நிகழ்வில் பங்கேற்ற பக்தா்கள்.

நிகழ்வில் பங்கேற்ற பக்தா்கள்.

முருகப்பெருமான் ஒவ்வொரு வாகனத்தில் மாடவீதியில் உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகிறாா். இந்நிலையில் ஞாயிற்றக்கிழமை அதிகாலை 4 மணிக்கு மேல் வள்ளியம்மையுடன் முருகப்பெருமான் எழுந்தருளினாா்.

பின்னா் சுவாமிக்கு சிறப்பு யாக பூஜைகள் நடந்து, வள்ளியம்மை திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் முருகப் பெருமானை வழிபட்டனா். விழாவில் முருகன் கோயில் இணை ஆணையா் க. ரமணி, கோயில் அரங்காவலா்கள் வி.சுரேஷ்பாபு, மு. நாகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.