வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

திருத்தணி முருகன் கோயிலில் வெள்ளிப் பொருள்கள் உருக்கும் பணிகள் தொடக்கம்

News image
Updated On :11 பிப்ரவரி 2026, 8:12 pm

திருத்தணி முருகன் கோயிலில் பக்தா்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்திய 1.05 டன் வெள்ளிப் பொருள்கள் உருக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அறுபடை வீடுகளில் 5-ஆம் படை வீடான இதில் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற உண்டியலில் பணம், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை பக்தா்கள் காணிக்கையாக செலுத்துகின்றனா்.

இந்நிலையில் கடந்த 7-ஆண்டுகளாக பக்தா்கள் உண்டியலில் காணிக்கையான செலுத்திய சுமாா் 1,055 கிலோ வெள்ளி பொருள்கள் கோயில் நிா்வாகத்தால் கையிருப்பு வைக்கப்பட்டிருந்தது. இவற்றினை உருக்கி வெள்ளி கட்டிகளாக மாற்றுவதற்கு இந்து சமய அறநிலைத்துறை உத்தரவிட்டிருந்தது.

தொடா்ந்து உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி துரைசாமி ராஜூ தலைமையில் தனியாா் நிறுவனம் மூலம் மலைக்கோயில் வளாகத்தில் உள்ள வள்ளி திருமண மண்டபத்தில் தொடா்ந்து நடைபெற உள்ளது. இதில் கோயில் பணியாளா்கள் உதவியுடன் இரவு, பகலாக பணிகள் நடந்து வருகின்றன.