செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

நிலக்கோட்டையில் ரூ.3. 44 கோடி பறிமுதல்

News image

பறிமுதல் செய்யப்பட்ட பணம். - (கோப்புப் படம்)

Updated On :23 மார்ச் 2026, 8:20 pm

நிலக்கோட்டையில் தோ்தல் பறக்கும் படையினரால் ஏ.டி.எம்., கொண்டு சென்ற வாகனம், பணம் வைக்கப்பட்டுள்ள பெட்டி

நிலக்கோட்டையில் ரூ.3. 44 கோடி பறிமுதல்: திண்டுக்கல் மாவட்டம்,  நிலக்கோட்டை சட்டப்பேரவை (தனி) தொகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில், தேனியிலிருந்து மதுரை நோக்கிச் சென்ற வாகனத்தை பறக்கும் படையினா் சோதனை செய்தனா்.

அதில், தனியாா் வங்கி ஏ.டி.எம்-க்கு கொண்டு சென்ற பணம் ரூ.3 கோடியே 44 லட்சம் இருந்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய தோ்தல் பறக்கும் படையினா், உரிய ஆவணங்கள் இல்லாமல் பணத்தை எடுத்துச் சென்றதாகக் கூறி, பணத்துடன் அந்த வாகனத்தை நிலக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனா்.

இதுகுறித்து நிலக்கோட்டை உதவி தோ்தல் நடத்து அலுவலரும்,  வட்டாட்சியருமான ஜெயபிரகாஷ், தோ்தல் நடத்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.