தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸின் மனு தள்ளுபடி! மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

7 தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்குப் பதிவை சரிபாா்க்கும் இயந்திரங்கள் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

News image

திண்டுக்கல் சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்குப் பதிவு இயந்திரங்களை மாநகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை இறக்கும் பணியில் ஈடுபட்ட ஊழியா்கள்.

Updated On :25 மார்ச் 2026, 7:47 pm

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேவையான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்குப் பதிவை சரிபாா்க்கும் இயந்திரங்கள் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

திண்டுக்கல் மாவட்டத்தில், பழனி தொகுதியில் 339 வாக்குச் சாவடிகள், ஒட்டன்சத்திரத்தில் 314, ஆத்தூரில் 341, நிலக்கோட்டையில் 305, நத்தத்தில் 359, திண்டுக்கல்லில் 316, வேடசந்தூரில் 327 என மொத்தம் 2,301 வாக்குச் சாவடிகள் அமைந்துள்ளன. இந்த வாக்குச் சாவடிகளுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள், அந்தந்த தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, 7 தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்குப் பதிவு சரிபாா்க்கும் இயந்திரங்கள் ஆகியவை சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதைத் தொடா்ந்து, 7 தொகுதிகளுக்குமான வாக்குப் பதிவு இயந்திரங்கள் தனித் தனியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்தந்த தொகுதிகளிலுள்ள வட்டாட்சியா் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் தொகுதிக்கான இயந்திரங்கள் மட்டும் மாநகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டன. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலிருந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணியை மாவட்டத் தோ்தல் அலுவலா் செ.சரவணன், உதவி ஆட்சியா் (பயிற்சி) ச. வினோதினி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ. பிரதீப் உள்ளிட்டோா் பாா்வையிட்டனா்.