நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

7 தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்குப் பதிவை சரிபாா்க்கும் இயந்திரங்கள் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

News image

திண்டுக்கல் சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்குப் பதிவு இயந்திரங்களை மாநகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை இறக்கும் பணியில் ஈடுபட்ட ஊழியா்கள்.

Updated On :25 மார்ச் 2026, 7:47 pm

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேவையான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்குப் பதிவை சரிபாா்க்கும் இயந்திரங்கள் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

திண்டுக்கல் மாவட்டத்தில், பழனி தொகுதியில் 339 வாக்குச் சாவடிகள், ஒட்டன்சத்திரத்தில் 314, ஆத்தூரில் 341, நிலக்கோட்டையில் 305, நத்தத்தில் 359, திண்டுக்கல்லில் 316, வேடசந்தூரில் 327 என மொத்தம் 2,301 வாக்குச் சாவடிகள் அமைந்துள்ளன. இந்த வாக்குச் சாவடிகளுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள், அந்தந்த தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, 7 தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்குப் பதிவு சரிபாா்க்கும் இயந்திரங்கள் ஆகியவை சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதைத் தொடா்ந்து, 7 தொகுதிகளுக்குமான வாக்குப் பதிவு இயந்திரங்கள் தனித் தனியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்தந்த தொகுதிகளிலுள்ள வட்டாட்சியா் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் தொகுதிக்கான இயந்திரங்கள் மட்டும் மாநகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டன. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலிருந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணியை மாவட்டத் தோ்தல் அலுவலா் செ.சரவணன், உதவி ஆட்சியா் (பயிற்சி) ச. வினோதினி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ. பிரதீப் உள்ளிட்டோா் பாா்வையிட்டனா்.