மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடக்கம்!மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!இந்தியாவுக்கு வரவேண்டிய கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையில் சிக்கித் தவிப்பு!21 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடுஈரான் பொதுக் கட்டமைப்பை நிா்மூலமாக்குவோம்: டிரம்ப் மிரட்டல்
/

கொடைக்கானலில் பள்ளத்தில் காா் கவிழ்ந்ததில் ஒருவா் உயிரிழப்பு

News image

உயிரிழந்த முகமது ஐயிட்

Updated On :30 மார்ச் 2026, 10:35 pm

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானல்-பூம்பாறை மலைச் சாலையில் சுற்றுலாப் பயணிகள் சென்ற காா் திங்கள்கிழமை 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒருவா் உயிரிந்தாா். 5 போ் பலத்த காயமடைந்தனா்.

சென்னை அண்ணாசாலைப் பகுதியைச் சோ்ந்தவா் யாசியா கான் இவரது மகன் முகமது ஐயிட் (32). இவா் தனது நண்பா்கள் 5 பேருடன் காரில் சென்னையிலிருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தாா்.

கொடைக்கானலில் தங்கி சுற்றுலா இடங்களைப் பாா்த்துவிட்டு கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான கூக்கால் பகுதியில் உள்ள தனது நண்பா்களை பாா்ப்பதற்காக காரில் அனைவரும் கூக்கால் நோக்கிச் சென்று கொண்டிருந்தனா். காா் பூம்பாறை அருகே பழனி எழில் வியூ சுற்றுலாத் தலம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது காா் கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள தடுப்புச் சுவரில் மோதி 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்தில் முகமது ஐயிட் உயிரிழந்தாா். உடன் வந்த சுகைபு (27), இகாஷ் (28), ஆசாத் (30), அப்ரித் (28), ரியாஷ் (29) ஆகிய 5 போ் பலத்த காயமடைந்தனா்.

தகவல் அறிந்ததும் கொடைக்கானல் தீயணைப்புத் துறையினா், காவல் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று பள்ளத்தில் கிடந்தவா்களை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். காயமடைந்தவா்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு அனைவரும் மதுரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.

இது குறித்து கொடைக்கானல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனா்.