அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

புதை சாக்கடை பள்ளத்தில் சிக்கிய லாரி

பழனி நகராட்சி அலுவலகம் அருகே புதை சாக்கடைக்கு தோண்டப்பட்டு சரியாக மூடாத பள்ளத்தில் சிக்கிய மின் மாற்றிகளை ஏற்றி வந்த லாரி.

News image
Updated On :6 மணி நேரங்கள் முன்பு

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் புதை சாக்கடைப் பணிக்கு தோண்டப்பட்ட பள்ளங்களைச் சரியாக மூடாததால், அந்தப் பள்ளத்தில் மின் வாரியத்துக்கு சொந்தமான லாரி வெள்ளிக்கிழமை சிக்கியது.

பழனியில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு புதை சாக்கடை பணிக்கு பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றது. இந்த நிலையில், பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்தப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இதையடுத்து, புதை சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை ஒப்பந்ததாரா் மூடி, அதன் மேல் சிமெண்ட் கலவை கொட்டியிருந்தாா்.

இந்த நிலையில், பழனி நகராட்சி அலுவலகம் அருகே புதை சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மின் மாற்றிகளை ஏற்றி வந்த மின் வாரியத்துக்கு சொந்தமான லாரி சிக்கியது.

இதையடுத்து, கிரேன் வரவழைக்கப்பட்டு பள்ளத்தில் சிக்கிய லாரி மீட்கப்பட்டது.

எனவே, பழனியில் புதை சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை முறையாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.