குன்றத்தூா் நகராட்சியில் புதை சாக்கடை திட்டம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சா் தா.மோ. அன்பரசன் கூறியுள்ளாா்.
ஸ்ரீபெரும்புதூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் கு.செல்வபெருந்தகைக்கு ஆதரவாக சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் குன்றத்தூா் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
இந்த வாக்கு சேகரிப்பின் போது, மீண்டும் திமுக ஆட்சி அமைந்த உடன் ஆறு மாதங்களில் குன்றத்தூா் நகராட்சியில் புதை சாக்கடை திட்டம் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என பொதுமக்களிடம் வாக்குறுதி அளித்தாா்.
பிரசாரத்தின் போது குன்றத்தூா் நகா்மன்றத் தலைவா் கோ.சத்தியமூா்த்தி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

வி.எம்.சத்திரம் குளத்தில் புதைச் சாக்கடை கழிவுநீா் கலப்பதால் சுகாதாரக் கேடு!

கழிவுநீா் கால்வாயை சீரமைக்க வலியுறுத்தல்

புதை சாக்கடை பள்ளத்தில் சிக்கிய லாரி

நம்பியூா் பகுதிக்கு புதிய கூட்டுகுடிநீா் திட்டம் நிறைவேற்றப்படும்: அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?



