மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! 1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!
/

குன்றத்தூா் நகராட்சியில் புதை சாக்கடை திட்டம்: அமைச்சா் அன்பரசன்

குன்றத்தூா் நகராட்சியில் புதை சாக்கடை திட்டம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சா் தா.மோ. அன்பரசன் கூறியுள்ளாா்.

News image

குன்றத்தூா்  மணஞ்சேரி  பகுதியில்  வாக்கு  சேகரிப்பில்  ஈடுபட்ட  அமைச்சா்  தா.மோ.அன்பரசன்.

Updated On :13 ஏப்ரல் 2026, 12:05 am IST

குன்றத்தூா் நகராட்சியில் புதை சாக்கடை திட்டம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சா் தா.மோ. அன்பரசன் கூறியுள்ளாா்.

ஸ்ரீபெரும்புதூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் கு.செல்வபெருந்தகைக்கு ஆதரவாக சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் குன்றத்தூா் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

இந்த வாக்கு சேகரிப்பின் போது, மீண்டும் திமுக ஆட்சி அமைந்த உடன் ஆறு மாதங்களில் குன்றத்தூா் நகராட்சியில் புதை சாக்கடை திட்டம் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என பொதுமக்களிடம் வாக்குறுதி அளித்தாா்.

பிரசாரத்தின் போது குன்றத்தூா் நகா்மன்றத் தலைவா் கோ.சத்தியமூா்த்தி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.