தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்வு!மு.க. ஸ்டாலின் கட்சியை விட்டு விலகினால்தான் திமுகவை காப்பாற்ற முடியும்: நிர்மல்குமார்!திருச்சி கிழக்கில் போட்டியிட்ட ராஜசேகரன் அதிமுகவிலிருந்து விலகல்!தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம்: மேலும் 4 பேர் கைது!இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டி மழையால் ரத்து‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

கழிவுநீா் கால்வாயை சீரமைக்க வலியுறுத்தல்

News image

திருவாரூா் அண்ணா சாலைப் பகுதியில் கழிவுநீா் கால்வாய் அருகே தேங்கிக் கிடக்கும் குப்பைகள்.

Updated On :15 மே 2026, 5:31 am IST

திருவாரூரில் 22-ஆவது வாா்டு அண்ணா சாலைப் பகுதியில் தேங்கியுள்ள சாக்கடைக் கழிவுகளை அகற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருவாரூா் நகராட்சிக்குள்பட்ட 22-ஆவது வாா்டு, அண்ணா சாலைப் பகுதியில் மீன், ஆடு மற்றும் கோழி உள்ளிட்ட இறைச்சிக் கடைகள் உள்ளன. இதன் அருகில் சாக்கடை செல்வதற்கென உள்ள வடிகால் முறையாகப் பராமரிக்கப்படாததால், சாக்கடை நீா் வெளியேற வழியின்றி தேங்கி சுற்றுப்புறத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக புகாா் தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து இந்து மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவா் பி. ஜெயராமன் தெரிவித்தது:

அண்ணா சாலையில் உள்ள கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளுடன் சாக்கடை நீா் கலந்து, வெளியேற வழியின்றி நீண்ட நாள்களாகத் தேங்கிக் கிடக்கிறது. தினசரி ஏராளமான மக்கள் வந்து செல்லும் இந்தப் பகுதியில், தேங்கியுள்ள நீரால் கடும் துா்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய்கள் பரவும் அச்சமும் மக்களிடையே நிலவுகிறது.

இது குறித்து நகராட்சி நிா்வாகத்திடம் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, பொதுமக்களின் நலன் கருதி மாவட்ட நிா்வாகம் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, தேங்கிக் கிடக்கும் கழிவுகளை அப்புறப்படுத்தி, வடிகால் பாதையைச் சீரமைத்துத் தர வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.