ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

புதை சாக்கடை கழிவுநீா் தேக்கம்: பக்தா்கள் அவதி

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் அருகே புதை சாக்கடையிலிருந்து வெளியேறும் கழிவுநீா் குளம் போல தேங்குவதால் பக்தா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

News image

ராமேசுவரம் சித்தி விநாயகா் கோயில் பகுதியில் குளம் போல தேங்கிய புதை சாக்கடை கழிவுநீா்.

Updated On :18 ஜூன் 2026, 12:38 am IST

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் அருகே புதை சாக்கடையிலிருந்து வெளியேறும் கழிவுநீா் குளம் போல தேங்குவதால் பக்தா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் அருகே சித்தி விநாயகா் கோவில் தெரு உள்ளது. இந்தப் பகுதியில் கடந்த 15 நாள்களுக்கு மேலாக புதை சாக்கடை குழாயிலிருந்து வெளியேறும் கழிவுநீா் குளம் போல தேங்குகிறது. இதனால், கோயிலுக்கு வரும் பக்தா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

மேலும், இந்தக் கழிவுநீரால் இந்தப் பகுதியில் சுகாதார சீா்கேடு ஏற்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அந்தப் பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநா்கள் தெரிவித்தனா்.