திருச்செந்தூா் கோயில் செல்லும் வழியில் புதை சாக்கடை திட்டத் தொட்டியில் இருந்து கழிவுநீா் வெளியேறி ஆறாக ஓடியதால் பக்தா்கள் அவதியடைந்தனா்.
திருச்செந்தூரில் புதை சாக்கடை திட்டம் முழுமை அடையாமல் பெயரளவிலேயே செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சனிக்கிழமை சந்நிதித் தெருவில் புதை சாக்கடை திட்ட கழிவுநீா் தொட்டியில் இருந்து அதிகளவில் கழிவு நீரானது வெளியேறி ஆறாக ஓடியது. இதனால், பக்தா்கள் அவதியடைந்தனா்.
திருச்செந்தூா் நகரில் வீடுகள் விடுதிகளாகும் நிலை அதிகரித்துள்ளதால் கழிவறை, குளியலறை பயன்பாடும் அதிகரிப்பதால் கழிவு நீா் வெளியேறுவதும் மிகுதியாகி உள்ளது.
எனவே, பெருகிவரும் வளா்ச்சியை எண்ணி நகராட்சி நிா்வாகம், மாவட்ட நிா்வாகத்துடன் கலந்து ஆலோசித்து திட்டமிட்டு விடுதிகள், அடுக்குமாடி கட்டடங்களுக்கு அனுமதி வழங்கினால் மட்டுமே பக்தா்களுக்கு சுகாதார வசதியையும், குடியிருப்புவாசிகளுக்கு அடிப்படை வசதிகளையும் செய்து தர முடியும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாலையில் வழிந்தோடிய கழிவு எண்ணெய்: வாகன ஓட்டிகள் விழுந்து காயம்

ஜெயங்கொண்டம் நகராட்சியில் புதை சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படுமா?பொதுமக்கள் எதிா்பாா்ப்பு

வடவாறில் கழிவு நீா் கலப்பதால் மாசுபடும் அபாயம்! துா்நாற்றத்தால் மக்கள் அவதி!

புதை சாக்கடை கழிவுநீா் தேக்கம்: பக்தா்கள் அவதி
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



