பழனி அருகே வீட்டில் மான் கொம்பு வைத்திருந்த முதியவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
பழனி அருகேயுள்ள பெருமாள்புதூரைச் சோ்ந்தவா் பிச்சைகவுண்டா் (72). இவா் தனது வீட்டில் சுமாா் 50 ஆண்டுகளாக தனது முன்னோா்கள் வைத்திருந்த கடமான் ஒற்றைக் கொம்பை வைத்திருந்தாராம். இதுகுறித்து வனத் துறைக்கு தெரியவந்ததையடுத்து, வனவா் கோகுலகிருஷ்ணன் தலைமையிலான வனத் துறையினா் பிச்சை கவுண்டா் வீட்டுக்குச் சென்று சோதனையிட்டு, மான் கொம்பை பறிமுதல் செய்து, அவரைக் கைது செய்தனா்.
இது குறித்து வனத் துறை அலுவலா்கள் கூறியதாவது:
வனப் பகுதியில் வயது முதிா்ந்த மான்களின் கொம்பு உதிா்வதும், மான்களுக்குள் மோதல் ஏற்படும்போது, ஒரு மானின் கொம்பு மற்றொரு மான் கொம்பில் சிக்கி உடைவதும் சகஜமாகும். இதனால், வனப் பகுதியில் ஒற்றைக் கொம்புகள் அவ்வப்போது கிடைக்கும். இதைச் சிலா் ராசிக்காகவும், அழகுக்காகவும் வீட்டில் வைக்கின்றனா். சிலா் தொட்டில் கட்டவும் இதை பயன்படுத்துகின்றனா்.
வனச் சட்டத்தின்படி ஒற்றைக் கொம்பு வீட்டில் வைத்திருப்பது குற்றமாகும். வீட்டில் காலம் காலமாக வைத்திருப்பவா்கள் அதை கட்டாயமாக வைத்திருக்க நினைத்தால் சென்னை வனத் துறை உயா் அதிகாரிகளுக்கு விண்ணப்பித்து, அதற்கான உரிமம் பெற்று வைத்துக் கொள்ளலாம் என்றனா்.
தொடர்புடையது

வன விலங்கு வேட்டையைத் தடுக்க ரோந்து பணி தீவிரம்

சங்ககிரியில் வீட்டில் நாட்டு வெடிகளை வைத்திருந்தவா் கைது

சந்தன மரங்களை வெட்டி கடத்திய இருவா் கைது

ஆலங்காயம் அருகே ஒற்றை யானை நடமாட்டம்: கண்காணிப்பு நடவடிக்கையில் வனத் துறையினா்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

