/

சங்ககிரியில் வீட்டில் நாட்டு வெடிகளை வைத்திருந்தவா் கைது

News image

கைது.

Updated On :1 மணி நேரம் முன்பு

சங்ககிரி வாணியா் காலனியில் அனுமதியின்றி வீட்டில் நாட்டு வெடிகளை வைத்திருந்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைதுசெய்தனா்.

இதுகுறித்து கிடைத்த தகவலின்பேரில் சங்ககிரி காவல் நிலைய உதவி ஆய்வாளா் அழகுதுரை தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் சோதனை நடத்தினா். அதில் சந்திரசேகரன் மகன் சுரேஷ் (50) வீட்டில் 59 சரம் நாட்டுவெடிகளை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பட்டாசுகளை பறிமுதல் செய்து சுரேஷை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.