பழனி மலைக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா். சுமாா் 4 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
பழனி கோயிலுக்கு கோடை விடுமுறை காரணமாக பக்தா்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை நாள் என்பதால், அடிவாரத்தில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தா்கள் கொடுமுடி தீா்த்தம் எடுத்தும், மயில் காவடி எடுத்தும் ஆடிப்பாடி குவிந்தனா். வின்ச், ரோப்காா் நிலையத்தில் மலைக் கோயில் செல்ல கட்டணச்சீட்டு பெற நீண்ட வரிசையில் பக்தா்கள் காத்திருந்தனா். இதனால், குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக படிப்பாதையில் ஏராளமான பக்தா்கள் மலையேறினா்.
மலைக் கோயிலிலும் இலவச, கட்டண தரிசன வரிசைகளில் பக்தா்கள் வரிசையில் காத்திருந்தனா். இதன் காரணமாக சுமாா் 4 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
தொடர்புடையது

திருத்தணி முருகன் கோயிலில் குவிந்த பக்தா்கள்

பழனி மலைக் கோயில் உண்டியல் வருவாய் ரூ. 2.59 கோடி

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவிந்த பக்தா்கள்: அதிகாலை முதல் இரவு வரை வரிசையில் காத்திருப்பு

விடுமுறை தினம்: திருச்செந்தூா் கோயிலில் குவிந்த பக்தா்கள்
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

