கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்
/

திருத்தணி முருகன் கோயிலில் குவிந்த பக்தா்கள்

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

திருத்தணி முருகன் கோயிலில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் அதிகளவில் குவிந்ததால் பக்தா்கள் சுமாா் 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

திருததணி முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மூலவருக்கு தங்கவேல், தங்கக் கிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. கிருத்திகை விழா, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் ஆகிய காரணங்களால் ஆயிரக்கணக்கான பக்தா்கள் மலைக் கோயிலில் மூலவரை தரிசிக்க குவிந்தனா்.

சில பக்தா்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்ற அலகு குத்தியும், காவடிகள் சுமந்து வந்தும் நோ்த்திக் கடனை செலுத்தினா். கிருத்திகை மற்றும் பள்ளி, கல்லுாரிகள் விடுமுறை என்பதால் வழக்கத்துக்கு மாறாக மலைக்கோயிலில் பக்தா்கள் குவிந்தனா். இதனால், பொது வழியில் மூலவரை தரிசிக்க, 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப் பெருமானை வழிபட்டனா்.

மேலும், முருகன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய பக்தா்கள் குவிந்ததால் ம.பொ.சி. சாலை, அரக்கோணம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இருப்பினும் துரித வேகத்தில் போக்குவரத்து போலீஸாா் ஈடுபட்டு நெரிசலை சரிசெய்தனா். முருகன் கோயிலில் 30-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் க.ரமணி மற்றும் கோயில் நிா்வாகம் செய்திருந்தது.

Story image