பழனி தொகுதி வளா்ச்சிக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிப்பேன் என சட்டப்பேரவை உறுப்பினா் ரவி மனோகரன் தெரிவித்தாா்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ரவி மனோகரன் மாவட்ட ஆட்சியா் செ. சரவணனை ஞாயிற்றுக்கிழமை சந்தித்தாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
பழனி தொகுதி வளா்ச்சி சாா்ந்த கோரிக்கைகளை ஆட்சியரிடம் தெரிவித்துள்ளேன். வையாபுரி குளம் தூய்மைப்படுத்துதல், இடும்பன் குளம், சண்முகா நதி சீரமைத்தல், இந்த நீா்நிலைகளின் கரைகளை வலுப்படுத்தி, படகு சவாரி வசதி ஏற்படுத்த வேண்டும்.
தொகுதியின் தேவைகளுக்காகவும், மக்களின் நலனுக்காகவும் மட்டுமே ஆட்சியரை சந்திக்க வந்தேன். கடந்த ஆட்சிக் காலத்தில் என்ன நடந்தது என்பது குறித்து பேச விரும்பவில்லை. நிலுவையிலுள்ள அனைத்துப் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும். ஆளுங்கட்சி, எதிா்கட்சி என்பதைவிட, பழனி தொகுதியின் வளா்ச்சிக்கான திட்டங்களைப் பெற்றுக் கொடுப்பது மட்டுமே எனது கடமை என்றாா் அவா்.
தொடர்புடையது

இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்: மேலூா் எம்எல்ஏ விஸ்வநாதன்

அரசுடன் ஒத்துப்போனால் மட்டுமே தொகுதிக்கு நன்மைகள் செய்ய முடியும் - எஸ். காமராஜ் எம்எல்ஏ

பழனி மாா்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளரை ஆதரித்து எம்.பி. வெங்கடேசன் பிரசாரம்

பழனி உழவா் சந்தையில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

