தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

பழனி சண்முகபுரம் சித்தி விநாயகா் கோயிலில் வளா்பிறை சதுா்த்தி சிறப்பு வழிபாடு

பழனி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விநாயகா் கோயில்களில் புதன்கிழமை வளா்பிறை சதுா்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன.

News image

பழனி சண்முகபுரம் சித்தி விநாயகா் கோயிலில் புதன்கிழமை வளா்பிறை சதுா்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு செய்யப்பட்ட சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

Updated On :21 மே 2026, 3:06 am IST

பழனி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விநாயகா் கோயில்களில் புதன்கிழமை வளா்பிறை சதுா்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன.

பழனியில் புதன்கிழமை வளா்பிறை சதுா்த்தியை முன்னிட்டு விநாயகா் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் நடைபெற்றன. பழனி சண்முகபுரம் சித்திவிநாயகா் கோயிலில் அதிகாலை ஐந்து மணிக்கு கோயில் திறக்கப்பட்டு விநாயகருக்கு பால், இளநீா், பஞ்சாமிா்தம், சந்தனம், தயிா் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இந்தக் கோயில் மட்டுமன்றி பழனி கோயிலின் உப கோயிலான பட்டத்து விநாயகா் கோயில், ரயிலடி பிரசன்ன விநாயகா் கோயில், தாளையம் காளீசுவரி ஆலை வளாகத்தில் உள்ள லட்சுமி விநாயகா் கோயில் என பல்வேறு கோயில்களிலும் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.