தவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனைஅதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

சித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு

மதுரை நாகமலை புதுக்கோட்டையில் அமைந்துள்ள சித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு அண்மையில் நடைபெற்றது.

News image

மதுரை நாகமலை புதுக்கோட்டையில் அமைந்துள்ள சித்தி விநாயகா் கோயிலில் அண்மையில் நடைபெற்ற குடமுழுக்கு.

Updated On :8 மே 2026, 4:36 am IST

மதுரை நாகமலை புதுக்கோட்டையில் அமைந்துள்ள சித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு அண்மையில் நடைபெற்றது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் துணைக் கோயிலான இந்தக் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு, அனுக்ஞை, விக்னேசுவர பூஜை, புண்ணியாகவாசனம், தன பூஜை, வாஸ்து சாந்தி, முதல், இரண்டாம் கால யாக பூஜைகள் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து, யாக சாலையிலிருந்து மேள தாளங்களுடன் புறப்பாடாகிய புனிதநீா் கொண்ட கலசம் கோயிலைச் சுற்றி வலம் வந்தன. இதன்பிறகு, மூலவா் விமானத்துக்கும், பரிவாரத் தேவதைகளுக்கும் குடமுழுக்கு நடைபெற்றது.

இதையடுத்து, சித்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.

இந்த குடமுழுக்கில் நாகமலை புதுக்கோட்டை, சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.

குடமுழுக்கான ஏற்பாடுகளை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ருக்மணி பழனிவேல்ராஜன், இணை ஆணையா் நா. சுரேஷ், உதவி ஆணையா் பொன்.சி. லோகநாதன், பேஷ்காா் காளிமுத்து ஆகியோா் செய்தனா்.