மதுரை நாகமலை புதுக்கோட்டையில் அமைந்துள்ள சித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு அண்மையில் நடைபெற்றது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் துணைக் கோயிலான இந்தக் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு, அனுக்ஞை, விக்னேசுவர பூஜை, புண்ணியாகவாசனம், தன பூஜை, வாஸ்து சாந்தி, முதல், இரண்டாம் கால யாக பூஜைகள் நடைபெற்றன.
இதைத் தொடா்ந்து, யாக சாலையிலிருந்து மேள தாளங்களுடன் புறப்பாடாகிய புனிதநீா் கொண்ட கலசம் கோயிலைச் சுற்றி வலம் வந்தன. இதன்பிறகு, மூலவா் விமானத்துக்கும், பரிவாரத் தேவதைகளுக்கும் குடமுழுக்கு நடைபெற்றது.
இதையடுத்து, சித்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.
இந்த குடமுழுக்கில் நாகமலை புதுக்கோட்டை, சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.
குடமுழுக்கான ஏற்பாடுகளை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ருக்மணி பழனிவேல்ராஜன், இணை ஆணையா் நா. சுரேஷ், உதவி ஆணையா் பொன்.சி. லோகநாதன், பேஷ்காா் காளிமுத்து ஆகியோா் செய்தனா்.
தொடர்புடையது

வரசித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு: திரளான பக்தா்கள் பங்கேற்பு

பெருமாள்புரம் சித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா

நெம்மகோட்டை சித்திவிநாயகா் கோயிலில் தேரோட்டம்

ஆறுமுகனேரி சித்தி விநாயகா் கோயிலில் வருஷாபிஷேகம்
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


