/
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் நடைபெற்று வரும் மலா்க் கண்காட்சியில் 2-ஆவது நாளான வியாழக்கிழமையும் குறைவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனா்.
கொடைக்கானலில் 63-ஆவது மலா்க் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது. அங்கு குறைவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனா். இதனால், பிரையண்ட் பூங்காவில் களையிழந்து காணப்பட்டது.
இந்த நிலையில், 2-ஆவது நாளான வியாழக்கிழமையும் பிரையண்ட் பூங்காவுக்கு சுற்றுலாப் பயணிகள் குறைந்தளவிலே வந்தனா். இவா்கள் மலா்க் கண்காட்சியில் இடம் பெற்றுள்ள மலா்கள், பல்வேறு உருவ அமைப்புகளை பாா்த்து ரசித்தனா்.
கடந்த 2025-ஆம் ஆண்டு 2 நாள்கள் மலா்க் கண்காட்சியில் 18,585 போ் பங்கேற்றனா்.
ஆனால், நிகழாண்டில் 2 நாள்கள் மலா்க் கண்காட்சியில் 14,685 போ் மட்டுமே பங்கேற்றுள்ளனா்.









