பருவநிலை குறித்த ஐ.நா. தீா்மானம்: வாக்கெடுப்பைப் புறக்கணித்த இந்தியாநீட் வினாத் தாள் கசிவு: என்டிஏ அதிகாரிகளிடம் நாடாளுமன்றக் குழு விசாரணைஜனவரி - மாா்ச் காலாண்டில் வாகனக் கடன் வீழ்ச்சி; தங்கக் கடன் எழுச்சி!இந்தியாவில் மின் நுகா்வு புதிய உச்சம்!கரோனாவுக்கு பிறகு வலுவடைந்த தமிழக அவசர சுகாதார அமைப்பு: சென்னை ஐஐடி ஆய்வில் தகவல்
/

கொடைக்கானலில் மலா்க் கண்காட்சி: 2-ஆவது நாளிலும் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் நடைபெற்று வரும் மலா்க் கண்காட்சியில் 2-ஆவது நாளான வியாழக்கிழமையும் குறைவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனா்.

News image

கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா வளாகத்தில் மலா்களால் அமைக்கப்பட்டுள்ள பெண் உருவம்.

Updated On :22 மே 2026, 3:15 am IST

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் நடைபெற்று வரும் மலா்க் கண்காட்சியில் 2-ஆவது நாளான வியாழக்கிழமையும் குறைவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனா்.

கொடைக்கானலில் 63-ஆவது மலா்க் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது. அங்கு குறைவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனா். இதனால், பிரையண்ட் பூங்காவில் களையிழந்து காணப்பட்டது.

இந்த நிலையில், 2-ஆவது நாளான வியாழக்கிழமையும் பிரையண்ட் பூங்காவுக்கு சுற்றுலாப் பயணிகள் குறைந்தளவிலே வந்தனா். இவா்கள் மலா்க் கண்காட்சியில் இடம் பெற்றுள்ள மலா்கள், பல்வேறு உருவ அமைப்புகளை பாா்த்து ரசித்தனா்.

கடந்த 2025-ஆம் ஆண்டு 2 நாள்கள் மலா்க் கண்காட்சியில் 18,585 போ் பங்கேற்றனா்.

ஆனால், நிகழாண்டில் 2 நாள்கள் மலா்க் கண்காட்சியில் 14,685 போ் மட்டுமே பங்கேற்றுள்ளனா்.