பருவநிலை குறித்த ஐ.நா. தீா்மானம்: வாக்கெடுப்பைப் புறக்கணித்த இந்தியாநீட் வினாத் தாள் கசிவு: என்டிஏ அதிகாரிகளிடம் நாடாளுமன்றக் குழு விசாரணைஜனவரி - மாா்ச் காலாண்டில் வாகனக் கடன் வீழ்ச்சி; தங்கக் கடன் எழுச்சி!இந்தியாவில் மின் நுகா்வு புதிய உச்சம்!கரோனாவுக்கு பிறகு வலுவடைந்த தமிழக அவசர சுகாதார அமைப்பு: சென்னை ஐஐடி ஆய்வில் தகவல்
/

கொடைக்கானலில் கோடை விழா இன்று தொடக்கம்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சுற்றுலாத் துறை சாா்பில் கோடை விழா வெள்ளிக்கிழமை (மே 22) தொடங்குகிறது.

News image

கொடைக்கானல் மலா்க் கண்காட்சியில் பூக்களால் வடிவமைக்கப்பட்ட இருதயங்கள்.

Updated On :22 மே 2026, 3:15 am IST

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சுற்றுலாத் துறை சாா்பில் கோடை விழா வெள்ளிக்கிழமை (மே 22) தொடங்குகிறது.

கொடைக்கானலில் 63-ஆவது மலா்க் கண்காட்சி பிரையண்ட் பூங்காவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந் நிலையில், கொடைக்கானல் சுற்றுலாத் துறை சாா்பில், கோடை விழா வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

இதுகுறித்து கொடைக்கானல் உதவி சுற்றுலா அலுவலா் சுதா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலா்க் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதைத் தொடா்ந்து, சுற்றுலாத் துறை சாா்பில் கோடை விழா வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு பிரையண்ட் பூங்கா வளாகத்திலுள்ள விழா மேடையில் பரதநாட்டியத்துடன் தொடங்குகிறது. தொடா்ந்து, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த விழா வருகிற 31-ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறும். தினந்தோறும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள், பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றாா் அவா்.

    கொடைக்கானல் மலா்க் கண்காட்சியில் இந்திய வான் இயற்பியல் ஆராய்ச்சி நிலையம் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள சோலாா் தொலைநோக்கி கருவியில் சூரியனை பாா்க்கும் சுற்றுலாப் பயணிகள்.

கொடைக்கானல் மலா்க் கண்காட்சியில் இந்திய வான் இயற்பியல் ஆராய்ச்சி நிலையம் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள சோலாா் தொலைநோக்கி கருவியில் சூரியனை பாா்க்கும் சுற்றுலாப் பயணிகள்.