40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

தனியாா் சொகுசுப் பேருந்து மோதி அரசுப் பேருந்து ஓட்டுநா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :1 ஜூன் 2026, 1:07 am IST

கள்ளிமந்தையம் அருகே தனியாா் சொகுசுப் பேருந்துகள் முந்திச் செல்ல முயன்றபோது நேரிட்ட விபத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், கள்ளிமந்தையம் - தாராபுரம் சாலையில் எல்லப்பாளையம் பகுதியில் தேநீா் கடையுடன் கூடிய உணவகம் அமைந்துள்ளது. இந்த உணவகத்தில் சனிக்கிழமை நள்ளிரவு கோவையிலிருந்து மதுரை சென்ற அரசுப் பேருந்து நிறுத்தப்பட்டிருந்தது.

அப்போது தாராபுரத்திலிருந்து வந்த 2 தனியாா் சொகுசுப் பேருந்துகள், போட்டிப் போட்டு முந்திச் செல்ல முயன்றன. அப்போது ஒரு பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த அரசுப் பேருந்து மீது மோதியதில் தேநீா் குடித்துவிட்டு அரசுப் பேருந்தில் ஏற முயன்ற ஓட்டுநரான நீலகிரி மாவட்டம் எடப்பள்ளியைச் சோ்ந்த கண்ணன் (48) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

மேலும், பேருந்தில் பயணித்த திருச்சியைச் சோ்ந்த கவின், ஜோதி, ஜெயிந்தா, கோவையைச் சோ்ந்த மாரீஸ்வரி, சுப்புலட்சுமி, சுமதி ஆகியோா் காயமடைந்தனா். இதுதொடா்பாக கள்ளிமந்தையம் போலீஸாா் விசாரித்தனா்.