பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

விலையை கேட்டாலே கண்ணீரை வரவழைக்கும் வெங்காயம்

மதுரை மாவட்டம், மேலூர் தினசரி சந்தையில் வெங்காயத்தின் விலையைக் கேட்டாலே கண்ணிலிருந்து நீரை வரவழைக்கும் அளவுக்கு உயர்ந்து வருகிறது.

Updated On :13 மே 2013, 12:07 am IST

மதுரை மாவட்டம், மேலூர் தினசரி சந்தையில் வெங்காயத்தின் விலையைக் கேட்டாலே கண்ணிலிருந்து நீரை வரவழைக்கும் அளவுக்கு உயர்ந்து வருகிறது.

  15 நாள்களுக்கு முன், சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ரூ. 25 ஆக இருந்தது. அதன்பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து, தற்போது கிலோ 60 ரூபாயாக உள்ளது. மதுரை, ஒட்டன்சத்திரம் ஆகிய இடங்களிலிருந்து மேலூர் தினசரி காய்கறி சந்தைக்கு 7 முதல் 10 மினி லாரிகளில் காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன.

 இந்நிலையில், கடந்த சில தினங்களாக மேலூர் சந்தையில் காய்கறிகளின் விலை  அதிகரித்துக் கொண்டே வருகிறது.

  காரட், பீன்ஸ் விலை கிலோ ரூ. 80 ஆகவும், கிலோ ரூ. 10-க்கு விற்பனையான தக்காளி ரூ. 40 ஆகவும் அதிகரித்துவிட்டது. தற்போது, டீசல் விலை உயர்வு காரணமாகவும், வரத்து குறைவாக உள்ளதாலும், வெங்காயம் மற்றும் காய்கறிகளின் விலை மேலும் உயரக்கூடும் என்கின்றனர் வியாபாரிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.