மதுரை அலங்காநல்லூர் அருகே சிக்கந்தர்சாவடியைச் சேர்ந்தவர் காளிமுத்து (35), கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி அம்சவள்ளி (29). சில நாள்களுக்கு முன் வீட்டில் சமையல் செய்தபோது, எதிர்பாராதவிதமாக ஸ்டவ் அடுப்பு வெடித்து அம்சவள்ளி உடலில் தீப்பற்றியது. ஆபத்தான நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார்.
தற்கொலை: சிக்கந்தர் சாவடியைச் சேர்ந்தவர் ஷாஜகான் (55). இவருடைய மனைவி முத்துகனி. இவர், சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இந்நிலையில், தனிமையில் இருந்துவந்த ஷாஜகான், வாழ்க்கையில் வெறுப்படைந்து வியாழக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
இந்த இரு சம்பவங்கள் தொடர்பாக, அலங்காநல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறாா்களுக்கான சமூக ஊடகத் தடைக்கு உச்சநீதிமன்றம் தடை

தென்காசி சாந்தி பன்னோக்கு மருத்துவமனை ஆண்டு விழா

பணகுடி அருகே விபத்து: இரு பெண்கள் உயிரிழப்பு

அந்நியச் செலாவணி கையிருப்பு 70,700 கோடி டாலராக அதிகரிப்பு
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்


