திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனிப் பெருவிழா நிறைவாக புதன்கிழமை சரவணப்பொய்கையில் தீர்த்த உற்சவம் நடைபெற்றது.
விழாவையொட்டி புதன்கிழமை காலையில் உற்சவர் சன்னதியில் புனித நீர் கொண்டு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, விநாயகர், சத்திய கிரீஸ்வரர், கோவர்தனாம்பிகை அம்மன், சண்டிகேஸ்வரர், அஸ்திரதேவர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. பின்பு சுவாமி, தெய்வானையுடன் சரவணப் பொய்கையில் எழுந்தருளினார். அங்கு மாலையில் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்று தங்கமயில் வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








