திருப்பரங்குன்றத்தில் சந்தனக்கூடு திருவிழா புதன்கிழமை இரவு தொடங்கி வியாழக்கிழமை அதிகாலை வரை நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவில் இவ்விழா கடந்த மார்ச் 19-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு விழா புதன்கிழமை இரவு தொடங்கி வியாழக்கிழமை அதிகாலை வரை நடைபெற்றது. விழாவினையொட்டி சுமார் 25 அடி உயரத்தில் மின் விளக்குகளால் சந்தனக்கூடு அலங்கரிக்கப்பட்டது.
அதில், சந்தனம் நிரப்பப்பட்ட செம்புடன் நகரின் முக்கிய வீதிகளில் சந்தனக்கூடு சுற்றி வந்தது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். பின்னர் மலை மீதுள்ள தர்காவுக்கு சென்று வழிபாடு நடத்தி, சந்தனம் பூசிக்கொள்ளப்பட்டது.
இவ்விழாவில் கோவை, திருச்சி, சிவகாசி, விருதுநகர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள் ஏராளமனோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நடிகர் மனோகர் மகன் திருமணம்! ஒன்றாகப் பங்கேற்ற ஈரமான ரோஜாவே குழுவினர்!

உயிருள்ள சிலை... உலகக் கோப்பையில் பங்கேற்ற காங்கோ ரசிகர்!

தைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!

2 ஆண்டுகளுக்குப் பிறகு சுந்தரி தொடர் நடிகர்களின் ரீயூனியன்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


