கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவிகளுக்கு மண்டல அளவிலான தடகளப் போட்டிகள் மதுரையில் திங்கள்கிழமை தொடங்கியது.
மதுரை டாக்டர் எம்.ஜி.ஆர். விளையாட்டுத் திடலில் தொடங்கிய இப்போட்டியில் தமிழகம், புதுச்சேரி, அந்தமான், கேரள மாநிலங்களைச் சேர்ந்த 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் 185 மாணவிகள் பங்கேற்றனர்.
தொடக்க நிகழ்ச்சியில் சர்வதேச கூடைப்பந்தாட்ட வீரர் ஹரிஹரசுதன் பங்கேற்று தொடங்கிவைத்தார். இதைத்தொடர்ந்து, ஓட்டப்பந்தயம், நீளம், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போட்டிகளில் ஊட்டி மற்றும் சென்னை ஆவடி பகுதியைச் சேர்ந்த கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவியர் அதிக போட்டிகளில் வென்றனர்.
100 மீ., ஓட்டத்தில் சென்னை ஆவடி ஹரினிஸ்ரீ (14 வயது பிரிவு), காரைக்குடி சுபாஷினி (17 வயது பிரிவு), கோவை தனுஸ்ரீ (19 வயது பிரிவு) ஆகியோர் முதலிடம் பிடித்தனர். புதன்கிழமை போட்டிகளின் நிறைவு விழா நடைபெறவுள்ளது. அதில் பள்ளிகள் வாரியாக முதலிடம் வகிக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்படவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை மதுரை நரிமேடு கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் டி.செல்வராஜ், உடற்பயிற்சி ஆசிரியர் எஸ்.மலைச்சாமி ஆகியோர் செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோடை வெய்யில்: பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறதா? அமைச்சர் ராஜ்மோகன் பதில்!

பணவீக்க நாயகனின் அதிரடி தொடருகிறது.. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!

கார்த்தி - 30 பூஜை!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


