பள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

அலங்காநல்லூர் அருகே  பூட்டிய வீட்டில்  25 பவுன் நகைகள்,  ரூ.1.50 லட்சம் திருட்டு

அலங்காநல்லூர் அருகே பூட்டிய வீட்டில் 25 பவுன் நகை, ரூ.1.50 லட்சத்தை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றதாக புதன்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Published On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

அலங்காநல்லூர் அருகே பூட்டிய வீட்டில் 25 பவுன் நகை, ரூ.1.50 லட்சத்தை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றதாக புதன்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள பொதும்பு வாசன் நகரைச் சேர்ந்தவர் குழந்தைவேலு (70). இவரது மகள் திருமணமாகி திருநெல்வேலியில் வசித்து வருகிறார். இந்நிலையில் தனது மகளை பார்ப்பகதற்காக குழந்தைவேலு குடும்பத்தினருடன் ஆகஸ்ட் 11-ஆம் தேதி திருநெல்வேலி சென்றுவிட்டார். பின்னர் அங்கிருந்து புதன்கிழமை காலை பொதும்பு வந்துள்ளார். 
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து குழந்தைவேலு உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 25 பவுன் நகைகள் மற்றும் ரூ.1.50 லட்சம் திருடு போனது தெரிய வந்தது. இதுதொடர்பாக குழந்தைவேலு அளித்தப்புகாரின்பேரில் அலங்காநல்லூர் போலீஸார் சம்பவ இடத்துக்குச்சென்று பார்வையிட்டனர். மேலும் தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு வீட்டின் அறை மற்றும் பீரோவில் பதிந்திருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். பின்னர் பழைய குற்றவாளிகளின் கைரேகை பதிவுகளோடு ஒப்பிட்டு பார்க்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் போலீஸார் வழக்குப்பதிவு திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.