தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

அலங்காநல்லூர் அருகே  பூட்டிய வீட்டில்  25 பவுன் நகைகள்,  ரூ.1.50 லட்சம் திருட்டு

அலங்காநல்லூர் அருகே பூட்டிய வீட்டில் 25 பவுன் நகை, ரூ.1.50 லட்சத்தை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றதாக புதன்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

அலங்காநல்லூர் அருகே பூட்டிய வீட்டில் 25 பவுன் நகை, ரூ.1.50 லட்சத்தை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றதாக புதன்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள பொதும்பு வாசன் நகரைச் சேர்ந்தவர் குழந்தைவேலு (70). இவரது மகள் திருமணமாகி திருநெல்வேலியில் வசித்து வருகிறார். இந்நிலையில் தனது மகளை பார்ப்பகதற்காக குழந்தைவேலு குடும்பத்தினருடன் ஆகஸ்ட் 11-ஆம் தேதி திருநெல்வேலி சென்றுவிட்டார். பின்னர் அங்கிருந்து புதன்கிழமை காலை பொதும்பு வந்துள்ளார். 
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து குழந்தைவேலு உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 25 பவுன் நகைகள் மற்றும் ரூ.1.50 லட்சம் திருடு போனது தெரிய வந்தது. இதுதொடர்பாக குழந்தைவேலு அளித்தப்புகாரின்பேரில் அலங்காநல்லூர் போலீஸார் சம்பவ இடத்துக்குச்சென்று பார்வையிட்டனர். மேலும் தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு வீட்டின் அறை மற்றும் பீரோவில் பதிந்திருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். பின்னர் பழைய குற்றவாளிகளின் கைரேகை பதிவுகளோடு ஒப்பிட்டு பார்க்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் போலீஸார் வழக்குப்பதிவு திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.