ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!மின் துறைக்கு 7,000 பணியாளர்கள் தேவை; 1500 பேருக்கு உடனடி பணி ஆணை!நீட் மறுதேர்வு! ஜூன் 21 வரை ரகசிய இடத்தில் வினாத்தாள் தயாரிப்போர்!ஆப்கானிஸ்தானை இன்னிங்ஸ், 300 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!மேற்கு ஆசிய மோதல்: பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா வலியுறுத்தல்!இஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் போர்!போட்டியின்றி எம்.பி.யாகிறார் பிரவீண் சக்ரவர்த்தி!நீட், சிபிஎஸ்இ விவகாரம்: மத்திய அமைச்சர் பதவி விலக வேண்டும் - வைகோ
/

பிஎஸ்என்எல் ஊழியர் வீட்டில் 16 பவுன் நகை திருட்டு

மதுரையில் பிஎஸ்என்எல் ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகை, ரூ.52 ஆயிரம் ரொக்கத்தை அடையாளம்

Updated On :25 டிசம்பர் 2018, 8:16 am IST

மதுரையில் பிஎஸ்என்எல் ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகை, ரூ.52 ஆயிரம் ரொக்கத்தை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றதாக திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 மதுரை குலமங்கலம் அருகே உள்ள கோசாகுளம் என்.பி.நகரைச் சேர்ந்தவர் ஜோதிநாதன்(55). பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவர் குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு வீடு திரும்பினார்.
 அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும், உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 16 பவுன் நகை, ரூ. 52 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக ஜோதிநாதன் அளித்த புகாரின்பேரில் கூடல்புதூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.