தே.கல்லுப்பட்டி அருகே சனிக்கிழமை சாலையை கடக்க முயன்ற பெண் மீது இரு சக்கர வாகனம் மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம், தே.கல்லுப்பட்டியைச் சேர்ந்த சுப்ரமணியன் மனைவி கேசவம்மாள் (54). இவர், கே. சத்திரப்பட்டியில் சாலையைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது, அவ்வழியாக அணைக்கரைப்பட்டியைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் மோதியதில், கேசவம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக தே. கல்லுப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.