மதுரை மாவட்டம் கீழவளவு அருகே சிசி கண்மாய் கிரானைட் குவாரிப்பள்ளத்தில் ஞாயிற்றுக்கிழமை நீரில் மூழ்கிய இரு சகோதரர்களை மீட்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
மேலூர் வெள்ளநாதன்பட்டியைச் சேர்ந்த சர்க்கரை மகன்கள் சதாம் உசேன் (22), சலீம் மற்றும் சந்தைப்பேட்டையைச் சேர்ந்த ராஜாமுகமது மகன் இஸ்ரத்முகமது (15) ஆகியோர் கீழவளவு சிசி கண்மாயிலுள்ள கிரானைட் குவாரிப்பள்ளத்தில் குளிக்கச்சென்றனர். அப்போது, நீச்சல் தெரியாத சதாம் உசேன் நீரில் மூழ்கினார்.
அவரைக் காப்பற்ற சலீமும் முயன்றபோது இருவரும் நீரில் மூழ்கினர். இதைப் பார்த்த இஸ்ரத் முகமது சத்தமிட்டுள்ளார்.
உடனே அருகிலிருந்தவர்கள் ஓடிவந்து தீயணைப்பு மீட்ப்புப் படையினருக்குத் தகவல் தெரிவித்தனர். மேலும் உதவிக்கு கொட்டாம்பட்டி தீயணைப்பு மீட்புப் படையினரும் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். குவாரிப்பள்ளம் நூறு அடிக்குமேல் ஆழமானது என்பதால் தேடும் பணியைத் தொடர முடியவில்லை. மேலும் இரவு நீண்டநேரமானதால், மீட்புப்பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இச்சம்பவம் குறித்து கீழவளவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கிற்கு சமூக நீதி வணக்கம்! முதல்வர் விஜய்

வெனிசுவேலாவில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! கட்டடங்கள் சேதம்!

தொடர்ந்து 3-வது நாளாகக் குறைந்த தங்கம் விலை! இன்றைய நிலவரம்? (ஜூன் 25)

பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடக்கம்! ஆட்டோ, ரியல் எஸ்டேட் பங்குகள் லாபம்!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


